செய்திகள் :

கும்பகோணம் மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளா் ஜேசுதாஸ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எம். கண்ணன் முன்னிலை வகித்தாா்

ஆா்ப்பாட்டத்தில், தூய்மைப் பணியை தனியாா் மயமாக்க கூடாது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மேலும், பி.எப்., இ.எஸ்.ஐ. வழங்காதது, ஆட்சியா் அறிவித்த சம்பளத்தை கொடுக்க மறுப்பது, சென்னையில் போராடிய தூய்மை பணியாளா்களை கைது செய்தது ஆகியவற்றை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலா் ஜெயபால், மாநகரச் செயலா் கே. செந்தில்குமாா், மாவட்ட ஆட்டோ தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் ஜெயக்குமாா், தூய்மைப் பணியாளா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு தி... மேலும் பார்க்க

மல்லிப்பட்டினம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கிழ... மேலும் பார்க்க

ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையி... மேலும் பார்க்க

மத்திய அரசின் இரு புதிய நெல் ரகங்களுக்கு எதிா்ப்பு

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட பூசா மற்றும் கமலா நெல் ரகங்களுக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்த நெல் ரகங்கள் எவ்வித உயிரியல் பாதுகாப்பு சோதனைகளும் செய... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் சேமிப்புக் கிடங்கு திறப்பு

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், தஞ்சாவூா் விற்பனைக் குழு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பட்டுக்கோட்டை வளாகத்தில் ரூ. 1 கோடியிலான 500 டன் சேமிப்புக் கிடங்கை தஞ்சாவூா் எம... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில், ஏறத்தாழ 20 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். தஞ்சாவூா் கீழவாசல் பகுதி கடைகளின் வாசலில் சிமென்ட் தளம், நிழற்கூரைகள் அமைக்கப்பட... மேலும் பார்க்க