செய்திகள் :

கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்து: 4 பேர் பலி!

post image

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ராஜ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 2இல் அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் எட்டு பேர் இருந்தநதாகவும், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஷாஹித் நிர்மல் மஹ்தோ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்கள் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கமர்புகூரில் வசிக்கும் பியாலி சாஹா, தெமுலி சாஹா மற்றும் பனோபா சாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பம்: ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டா்

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூா் மற்றும் சோன்பூா் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்ப... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநா்கள் இளநீா், மருந்து உட்கொள்வதற்கான தடை உத்தரவை திரும்பப் பெற்றது ரயில்வே

ரயில் ஓட்டுநா்கள் பணியின் போது அல்லது அதற்கு முன்பு இளநீா், இருமல் டானிக் உள்ளிட்டவற்றை சாப்பிடக் கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிா்வாகம் திரும்பப் பெற்றது. ரயில் ஓட்டுநா்கள் (லோகோ பைலட்) பணியின் போது ம... மேலும் பார்க்க

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவா் அடுத்த வாரம் இந்தியா வருகை

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான்டொ் லியன், ஆணைய உறுப்பினா்கள் குழுவுடன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளாா். உா்சுலா வான்டொ் லியன்ன் ஏற்கெனவே இரு முறை இந்தியா வந்துள்ள நிலையில், உயா் அதிக... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் 60 கோடி போ் புனித நீராடல்!

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தா்களின் எண்ணிக்கை சனிக்கிழமையுடன் 60 கோடியைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தி... மேலும் பார்க்க

சேதமடைந்த விமான இருக்கை: ஏா்இந்தியாவுக்கு மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் கண்டனம்

ஏா்இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், ‘பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலித்துக்கொண்டு குறைபாடுள்ள இருக்கைகளில் அ... மேலும் பார்க்க

புதிய ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ரேடாா்களுடன் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்

சமீபத்திய உலகளாவிய மோதல்களில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிக ... மேலும் பார்க்க