செய்திகள் :

`குருவாயூர் கோயில் குளத்தில் கால் கழுவி ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் ஜாஸ்மீன் ' - புனிதப்படுத்த சடங்கு

post image

பியூட்டி & லைஃப் ஸ்டைல் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் ஜாஸ்மீன் ஜாபர். மலையாள பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்டு மூன்றாமிடம் பிடித்து செய்திகளிலும், ஊடகங்களிலும் வைரலானவர்.

தொடர்ந்து சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பதிவுகள், Vlog பதிவுகள் மூலம் இயங்கி வருபவர்.

இவர் சமீபத்தில் குருவாயூர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கோயிலில் சில ரீல்ஸ்களையும் எடுத்திருக்கிறார். அதில் ஒரு ரீல்ஸ், குருவாயூர் கோயிலின் குளத்தில் கால் வைத்திருப்பது போன்ற வீடியோ. அது சமூக ஊடகங்களில் வைரலானது.

புனித குளத்தில் ஜாஸ்மின்

ஜாஸ்மின் தான் எடுத்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால் உடனே அந்த வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதோடு தனது செயலுகாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். கோயில் நடைமுறைகள் தனக்கு தெரியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, "உயர் நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறி கோயில் குளம் மற்றும் நடப்புரா (வெளிப்புற முற்றம்) உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆராட்டு, தெய்வச் சடங்கு குளியல் போன்ற சடங்குகளுக்கு குளம் பயன்படுத்தப்படுவதால் அந்தக் குளம் மத முக்கியத்துவம் வாய்ந்தது" என ஜாஸ்மீன் ஜாபர் மீது குருவாயூர் தேவஸ்தான வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

அதைத் தொடர்ந்து, ``செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் குருவாயூர் கோயில் குளத்தில் சுத்திகரிப்பு சடங்கு (புண்யாஹம்) நடைபெறும்.

முதல் பதினெட்டு பூஜைகள், பதினெட்டு 'ஸ்ரீவேலிகள்' திட்டமிடப்பட்டு, ஆறு நாள்கள் சடங்குகள் நடைபெறும்" என கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இன்று காலை 5 மணிக்கு இந்த புனிதப்படுத்தும் சடங்குகள் தொடங்கியது. இதையடுத்து இன்று காலையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இன்று மாலை 5 மணிக்குபிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Diamond Hunting: ஆந்திராவில் `வைர வேட்டை' - மழைக்காலங்களில் கிடைக்கும் வைரம்? -படையெடுக்கும் மக்கள்

ஆந்திராவின் வைரம் விளையும் மண்ணாக ராயலசீமா கருதப்படுகிறது. ராயலசீமா பகுதியில் பெய்து வரும் மழை, கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடும் பருவமாக மாறி... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி

மும்பை கொங்கன் பகுதிமகாராஷ்டிராவில் வரும் புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. இவ்விழாவிற்காக மும்பையில் இருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்... மேலும் பார்க்க

ஒரு குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்து சென்ற செவிலியர் - குவியும் பாராட்டுகள்!

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக காட்டாற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் செவிலியரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. காதைக் கிழிலும் இரைசல... மேலும் பார்க்க

அம்மா உடன் முதல் விமானப் பயணம்: "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" - நெகிழ்ந்த விமானி!

ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ... மேலும் பார்க்க

விநாயகர் விசர்ஜனம்: ``மண்சிலைக்கு திரும்பினாதான் எங்க வாழ்க்கையும், பூமியும் நல்லா இருக்கும்''

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாறு, பட்டு கண்ணம் செஞ்ச மண்ணு அது பொன்னூறு, காது செஞ்ச மண்ணு அது மேலூறு…அடடா இப்பெல்லாம் எங்க மண்ணில் சிலை செய்வாங்க?, இந்த காலத்துல போய் மண்ணை மிதிச்சு ரெடி பண்ணி நாள் கணக்க... மேலும் பார்க்க

Viral Video: ''அவரின் புன்னகை ஒரு மந்திரம்'' - Instagram-ல் வைரலாகும் பாட்டி வீடியோ; பின்னணி என்ன?

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் கான்டென்ட் கிரியேட்டர் சஞ்சிதா அகர்வால். அந்த வீடியோவில், சஞ்சிதா தனது காரை ஓட்டி கொண்டி... மேலும் பார்க்க