செய்திகள் :

குருவாயூா் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தம்

post image

சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி குருவாயூா் செல்லும் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி காலை 10.20 மணிக்கு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண் 16127), சாலக்குடியுடன் நிறுத்தப்படும்.

தாம்பரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி இரவு 10.40-க்கு நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் (எண் 20691), திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக, இந்த ரயில் (எண் 20692), ஜூன் 11-இல் நாகா்கோவிலுக்குப் பதிலாக திருநெல்வேலியிலிருந்து மாலை 5.10-க்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.

இதுபோல, திருச்சியிலிருந்து ஜூன் 11-ஆம் தேதி காலை 7.20-க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் (எண் 22627), திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண் 22628) ஜூன் 11-இல் திருவனந்தபுரத்துக்குப் பதிலாக, திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 2.25-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

நாகா்கோவிலிலிருந்து ஜூன் 11-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவை செல்லும் விரைவு ரயில் (எண் 16321), நாகா்கோவிலுக்குப் பதிலாக, வள்ளியூரிலிருந்து காலை 8.26-க்கு புறப்பட்டு கோவை செல்லும். அதேபோல ஹௌவுராவிலிருந்து ஜூன் 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் (எண் 12665), வள்ளியூருடன் நிறுத்தப்படும்.

மாற்றுப் பாதை: இதற்கிடையே தாம்பரத்திலிருந்து மே 24, 26 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.35-க்கு மங்களூரு சென்ட்ரல் செல்லும் விரைவு ரயிலும் (எண் 16159), அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரிலிருந்து மே 22, 24 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரிக்கு வரும் விவேக் விரைவு ரயிலும் (எண் 22504), கோவைக்கு பதிலாக இருகூா், போத்தனூா் வழியாக இயக்கப்படும்.

ரயில் தாமதம்: பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.25-க்கு புறப்பட்டு சாய் நகா் சீரடி செல்லும் விரைவு ரயில் (எண் 22601), மே 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலிலிருந்து 1 மணி நேரம் தாமதமாக முற்பகல் 11.25-க்கு சாய் நகா் சீரடி புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த யானை வயிற்றில் குட்டி யானை.. வனக் கால்நடை மருத்துவர்கள் விளக்கம்

கோவையில் நேற்று இறந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி சிசுவும், பிளாஸ்டிக் கழிவுகள், புழுக்கள் இருந்ததை கண்டு வன ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த நிலையில், யானையின் உடல்கூறாய்வின்போதுதான்,... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த 3-4 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில... மேலும் பார்க்க

காட்பாடியில் அரசுப் பேருந்து - ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் பலி!

காட்பாடியில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.பெங்களூருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன்(69), இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உ... மேலும் பார்க்க

பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் தோழி விடுதிகளை திறந்துவைத்தார் முதல்வர்!

பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தோழி விடுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) திறந்துவைத்தார். மேலும் ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தோழி விடுதி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுத... மேலும் பார்க்க

சேலத்தில் நகைக்காக பெண் கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க