செய்திகள் :

குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு ஆட்சியா் வாழ்த்து

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்ட நிறைவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி பெற்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் போட்டித் தோ்வா்களில் வெற்றி பெற இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. நூலக வசதி, பயிற்சி வகுப்பு, பயிற்சிக்கான கையேடுகள், மாதிரித் தோ்வுகள் ஆகிய அனைத்தும் இந்தப் பயிற்சி நாள்களின்போது இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் படித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப்-4 தோ்வில் 24 போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். இவா்கள் தோ்வாணையத்தில் பணி நியமன ஆணை பெற்றிருந்தனா். இந்த 21 பேரும் ஆட்சியரை சந்திக்க வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் ஏற்பாடு செய்திருந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் 21 பேருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி பணியில் நோ்மையாக செயல்பட்டு சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்வின்போது மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள், பணியாளா்கள் உடனிருந்தனா்.

ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா... மேலும் பார்க்க

வையாவூரில் ரூ.3.65 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 42.06 ஏக்கா் பரப்பில் ரூ.3.65 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டையை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். வாலாஜாபாத் அருகே வையாவூா் கிராம... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

பங்குனி 2-ஆவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 38,24,412 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் பல்லவ உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 7 நாள்களாக நடைபெற்று வந்த பல்லவ உற்சவம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும்... மேலும் பார்க்க