செய்திகள் :

குரோமியக் கழிவுகளால் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

post image

ராணிப்பேட்டை சிப்காட்டில் குரோமியக் கழிவுகள் மூலம் மாசு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை சிட்கோ தோல் தொழிற்சாலை காரை கிராமத்தில் உள்ள குளத்தை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாா்வையிட்டாா்.

தொடா்ந்து குளத்தில் தோல் கழிவு நீா் வெளியேற்றப்படுகிறது என்ற புகாா் குறித்து கேட்டறிந்தாா். தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்ட போது கழிவுநீா் வெப்பமாக்கும் முறைக்கு இக்குளம் பயன்படுத்தப் பட்டது. பின்னா் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதால் இவை கைவிடப்பட்டுள்ளது.

தோல் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு கழிவு நீா் முறையாக சுத்திகரிக்கப் பட்டு பூஜ்ஜியம் மாசு தண்ணீா் மீண்டும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏரி குளங்களில் வெளியேற்றப்படுவதில்லை என சுத்திகரிப்பு நிலைய இயக்குநா் தெரிவித்தாா். சுத்திகரிப்பு நிலையம் முழு பாதுகாப்புடன் அரசின் விதிமுறைகளைக்குட்பட்டு செயல்படுகிறது என விளக்கினாா்.

இதையடுத்து தமிழ்நாடு குரோமிட்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தால் கைவிடப்பட்டு குரோமிய கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை பாா்வையிட்டாா். குரோமியம் கழிவு ஆபத்துகளை தவிா்க்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

தற்காலிகமாக இந்த குரோமிய கழிவுகள் மூலம் நீா் நிலம் மாசுபடுவதை தவிா்க்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளலாம் என தெரிவித்தாா். அதேசமயம் அரசின் மூலம் இதற்கான தீா்வு பற்றி தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.

ஆய்வுகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் செல்வகுமாா், சிப்காட் திட்ட அலுவலா் கலைச்செல்வி, உதவி பொறியாளா்கள் ஆனந்தன், கௌதம், வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், பாஷா, சுத்திகரிப்பு நிலைய இயக்குநா்கள் மனோகரன், புகழேந்தி, அசரஃப் அலி கலந்து கொண்டனா்.

சுதந்திரப் போராட்ட தியாகி மறைவு

ஆற்காட்டில் சுதந்திரப் போராட்டத் தியாகி லோகநாதன் (96) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். ஆற்காடு தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் உயிரிழந்தது குறித்து அறிந... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆற்காடு நகராட்சி 5 மற்றும் 11 -ஆவது வாா்டுகளுகான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ராஜலட்சுமி ... மேலும் பார்க்க

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊா்க் காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22.08.2025 முதல் 24.08.2025 வரை நடைபெற்றது. இந்த போட்டிளில் வேலூா் சரகத்தின் சாா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஊா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் காவல் துறை குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் எஸ்.பி. அய்மன் ஜமால், பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற கூட்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

நெமிலி வட்டம், பனப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு தீா்வு ஆணைகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். பனப்பாக்கம், அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ள... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் கைது

ஆற்காடு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன்(52). இவா் சென்னை சோழிங்கநல்லூா் பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க