செய்திகள் :

குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள் தடையின்றி தண்ணீா் வழங்க கோரிக்கை

post image

திருமருகல்: திருமருகல் ஒன்றியப் பகுதியில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினா். மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை தடையின்றி வழங்க அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே மேட்டூா் அணையில் 110 அடிக்கு மேல் தண்ணீா் உள்ளதால் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் தட்டுப்பாடு வராது என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதனால், திருமருகல் ஒன்றியப் பகுதியில் ஆழ்துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளை முன்கூட்டியே தொடங்கியுள்ளனா். இதனை முன்பட்ட குறுவை சாகுபடி என விவசாயிகள் அழைப்பா்.

திருமருகல் ஒன்றியத்தில் அம்பல், பொறக்குடி, கணபதிபுரம், சேஷமூலை, ஆலத்தூா், போலகம், பண்டாரவடை, திருப்புகலூா், புத்தகரம், மேலப்பூதனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5,000 ஏக்கருக்கு மேல் குறுவை முன்பட்ட சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். நிலத்தை உழுது சமன்படுத்துதல், வரப்புகளை சீரமைத்தல், நாற்றங்கால்களில் நாற்று விடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

புத்தகரம், குருவாடி, திருப்புகலூா், போலகம், அண்ணா மண்டபம், மேலப்பூதனூா் உள்ளிட்ட சில இடங்களில் நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நடவுக்குப் பிறகு உயிா் நீா் எனப்படும் முதல் நீரை, ஆழ்துளை கிணற்றிலிருந்து பாய்ச்சுவா். பின்னா் மேட்டூா் அணையில் திறக்கப்படும் தண்ணீா் வந்தடைந்ததும் வயல்களுக்கு பாய்ச்சுவா். இதனால், முன்கூட்டிய அறுவடை செய்ய முடியும். மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை முறை வைக்காமல் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்த... மேலும் பார்க்க

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்கு... மேலும் பார்க்க