செய்திகள் :

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

post image

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவலகத்துக்குள் புகுந்த இளைஞர்கள் சிலர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூ மீது சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும், அவரை அடித்து, உதைத்து தர, தரவென அலுவலகத்துக்கு வெளியே இழுத்துச் சென்றனர். இதை ஒருவர் விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த விடியோவில், ரத்னாகர் சாஹூவை இளைஞர்கள் சிலர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அடையாளம் தெரியாத இளைஞர்கள் அந்த அதிகாரியின் சட்டையின் காலரைப் பிடித்து அலுவலகத்திற்கு வெளியே இழுத்துச் சென்றனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, 6 இளைஞர்கள் ரத்னாகர் சாஹூவின் அறைக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளர். இதனால், ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலுக்கான சரியாக காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஊழியர்கள் அலுவலக வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை கவனத்தில் கொண்டு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வீடியோவைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தற்போதைய முதல்வர் மோகன் சரண் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது.

ஒரு மூத்த அதிகாரிக்கே தனது அலுவலகத்திலேயே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண குடிமக்கள் அரசிடமிருந்து என்ன சட்டம் ஒழுங்கை எதிர்பார்க்கிறார்கள்?” எனப் பதிவிட்டுள்ளார்.

Punches, kicks, slaps, and abuses were all rained on the Additional Commissioner of the Bhubaneswar Municipal Corporation (BMC), Ratnakar Sahoo, who was assaulted by a group of young men inside the civic body office while conducting a public grievance redressal meeting on Monday.

இதையும் படிக்க... சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை! - விஜய் கடும் கண்டனம்

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சிவசாகா் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ... மேலும் பார்க்க

திருப்புமுனையான சீா்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுவடிவமைத்த திருப்புமுனையான சீா்திருத்தமே சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போத... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினாா் திரிணமூல் தலைவா்

மேற்கு வங்கத்தில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலை... மேலும் பார்க்க