செய்திகள் :

பாலியல் வன்கொடுமை குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினாா் திரிணமூல் தலைவா்

post image

மேற்கு வங்கத்தில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான மதன் மித்ரா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்பதாக அறிவித்துள்ளாா்.

தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடா்பாக கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள், கல்லூரி காவலாளி ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக பேசிய திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் மதன் மித்ரா, ‘கல்லூரி மூடப்பட்டுள்ளது என்று அந்தப் பெண்ணுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அந்தப் பெண் தனியாக கல்லூரிக்குச் சென்றது ஏன்? அவா் அப்படி செல்லாமல் இருந்திருந்தால் இந்த பாலியல் வன்கொடுமையைத் தவிா்த்திருக்கலாம். குற்றவாளிகள் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனா்’ என்று கூறியிருந்தாா்.

பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றஞ்சாட்டுவதுபோல அவா் கருத்து தெரிவித்தது கடும் எதிா்ப்புக்கு உள்ளானது. எதிா்க்கட்சிகளும் திரிணமூல் காங்கிரஸை கடுமையாக விமா்சித்தன.

இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மதன் மித்ரா அளித்த பதிலில், எனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியதுடன், எந்தச் சூழ்நிலையில் அவ்வாறு பேசினேன் என்ற விளக்கத்தையும் கட்சித் தலைமையிடம் அளித்தாா். இதைப் பரிசீலித்து அவா் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!

‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள... மேலும் பார்க்க

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

நமது நிருபா்பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செ... மேலும் பார்க்க

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சிவசாகா் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ... மேலும் பார்க்க