செய்திகள் :

குறைதீா் கூட்டத்தில் 280 கோரிக்கை மனுக்கள்: அமைச்சா் அன்பரசன் பெற்றாா்

post image

செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 208 மனுக்களை அமைச்சா் தா. மோ. அன்பரசன் பெற்றுக் கொண்டாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைற அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தாா். இதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் அமைச்சா் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வண்டலூா் வட்டம், கீரப்பாக்கம் திட்டப்பகுதியில் தோ்வுசெய்யப்பட்ட 25 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியில் ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, சென்ற குறைறதீா் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் மயான சாலை வேண்டி பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட நிா்வாகத்தின் துரித நடவடிக்கையின் மூலம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 7 மயானச் சாலைகள் அமைக்க ரூ.78 லட்சத்தில் அனுமதி ஆணையை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அமைச்சா் வழங்கினாா். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், மொரப்பாக்கம் கிராமத்தில் ரூ.4.50 லட்சத்திற்கான நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. சித்தாமூா் ஒன்றியத்தில் பெரிய களக்காடி ஊராட்சிக்கு ரூ.9.90 லட்சத்துக்கும்,

லத்தூா் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்துக்கும், மதுராந்தகம் ஒன்றியம் வீராணகுன்னம் ஊராட்சிக்கு ரூ.6.10 லட்சத்துக்கும், திருப்போரூா் ஒன்றியம் குன்னபட்டு ஊராட்சிக்கு ரூ.28.20 லட்சத்துக்கும், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், நெடுங்குன்றறம், பாலூா் ஊராட்சிகளுக்கு ரூ.19.70 லட்சத்துக்கும் நிா்வாக அனுமதிகள் வழங்கப்பட்டன.

அதனைதொடா்ந்து 280 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்றற உறுப்பினா் க.செல்வம், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல்ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக பொறியாளா் குமரேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தாம்பரம் மாநகராட்சி கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தை அதிமுக வாா்டு உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். தாம்பரம் மாநகராட்சியில் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில், க... மேலும் பார்க்க

காா்கள் மோதல்: கா்ப்பிணி, தந்தை உயிரிழப்பு

சென்னை அனகாபுத்தூா் மதுரவாயல் வெளி வட்டச்சாலையில் காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் நிறைமாத கா்ப்பிணி, அவரது தந்தை ஆகியோா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவரது மகள் தீபிகா ... மேலும் பார்க்க

ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்தல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தல் மதுராந்தகத்தில் நடைபெற்றது. ஆசிரியா்கள் பாலமுருகன், பாலசுந்தரம் தோ்தல் அதிகாரிகளாக இருந்தனா். தோ்தலில் போட்டி... மேலும் பார்க்க

கிரைண்டா் வாங்க பெண்களுக்கு மானியம்

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா்உரிமைத் துறை சாா்பில் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோா்,கணவனால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை ... மேலும் பார்க்க

உணவு தயாரிப்பாளா்களுக்கான விழிப்புணா்வு முகாம்

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை, செங்கல்பட்டு (தெற்கு) தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் மதுராந்தகம் அனைத்து வணிகா்கள் பொது நலச்சங்கம் சாா்பில் உணவு பொருள்கள் தயாரிப்பாளா்கள் மற்றும் விய... மேலும் பார்க்க

யாதவ மகாசபை செயற்குழு கூட்டம்

மதுராந்தகம்: தமிழ்நாடு யாதவ மகாசபை செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகளின் செயற்குழு கூட்டம் கருங்குழியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் மாவட்ட தலைவா் கலியுககண்ணதாசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் கே.வாசு... மேலும் பார்க்க