செய்திகள் :

குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரத்து செய்த வங்கிகளின் பட்டியல்

post image

கனரா வங்கி உள்ளிட்ட 6 வங்கிகள், தங்களது சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளன.

2020ஆம் ஆண்டிலேயே, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டியதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துவிட்டது. இதில், கனரா வங்கியும் சேர்ந்துகொண்டது. ஜூன் மாதம் முதல், குறைந்தபட்ச இருப்புக்கான அபராதம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.

அதனுடன், பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி, இந்திய வங்கி, ஆகியவையும் இந்த முடிவை அறிவித்துள்ளன.

பொதுவாக வங்கிகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பத்தொகை கிராமப்புறங்களில் குறைவாகவும், பெருநகரங்களில் அதிகமாகவும் உள்ளது. இந்தத் தொகையானது வங்கிக்கு வங்கி மாறுபட்டு இருக்கும்.

இது ஏழை,எளிய மக்களை வெகுவாக பாதித்து வந்தது. சில கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருப்பார்கள். அதாவது ஆயிரம் ரூபாய் வைத்திருப்பார்கள். ஆனால், சேவைக் கட்டணங்கள் பிடித்தம் செய்யும்போது அந்தத் தொகை குறைந்து, அது முதல் குறைந்தபட்ச இருப்பு இல்ததற்கு அபராதத் தொகை வசூலித்தே அதில் இருக்கும் மொத்த பணமும் காலியாகும் நிலையும் உருவானது. இது மக்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், சேமிப்புக் கணக்குகள், சம்பள கணக்குகள், வெளிநாடுவாழ் இந்தியா் சேமிப்புக் கணக்குகள் என அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டுவந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக கனரா வங்கி அறிவித்தது. பிறகு படிப்படியாக ஒவ்வொரு வங்கியாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே இந்த அபராதத்தைக் கைவிட்டுவிட்டது. அந்த வரிசையில் மற்றொரு பொதுத் துறை வங்கியான கனரா வங்கியும் இணைந்துகொண்டது. பிறகு இந்த வங்கிகளும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதால், இதன் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Six banks have announced that they are no longer required to maintain a minimum balance; the penalty imposed for this will be waived.


டிசிஎஸ் பங்குகள் 2.51% சரிவு!

புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.51 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தன. நிறுவனத்தின் ஜூன் முடிய உள்ள காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் பங்குக... மேலும் பார்க்க

க்ளென்மார்க் பார்மா பங்குகள் 10% உயர்வுடன் நிறைவு!

புது தில்லி: புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக $2 பில்லியன் வரையிலான ஒப்பந்தத்தில் அப்பிவி (AbbVie) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக க்ளென்மார்க் பார்மா நிறுவனம் தெ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பால் உந்தப்பட்டு, முந்தைய அமர்வில் 2% சரிவைத் தொடர்ந்து, இன்றைய காலை நேர வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று நிலையாக இருந்தது.பிரெண்ட் கச்சா எண்ண... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.77 ஆக நிறைவு!

மும்பை: உள்ளூர் பங்குச் சந்தைகள் பலவீனமாகவும், வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மையுடனும் இருந்ததால், இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ர... மேலும் பார்க்க

ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: தொடர்ந்து 3வது நாளான இன்றும் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. இன்றயை வர்த்தகத்தில் ஐடி, ஆட்டோ மற்றும் எரிசக்தி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில... மேலும் பார்க்க

3-வது நாளாக சரிவில் பங்குச்சந்தை! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு!!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச்சந்தைகள் இன்றும்(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,820.76 என்ற புள்ளிகளில் தொடங்கியது. நண்பகல் 12.3... மேலும் பார்க்க