Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் - கார...
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அவ்வப்போது லேசான வெயிலும், சாரலும், குளிா்ந்த காற்றும் வீசியது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.