செய்திகள் :

குற்ற வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடிப்பு

post image

கரூரில் குற்ற வழக்கில் பிடிக்கச் சென்ற போலீஸாரிடமிருந்து வியாழக்கிழமை தப்ப முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தாா்.

கரூா் சுக்காலியூரைச் சோ்ந்த மலையாளம் (51) என்பவா் கடந்த 17-ஆம் தேதி இரவு கரூா் லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் நின்றபோது அங்கு மதுபோதையில் வந்த ரெளடிகளான கரூா் சின்னாண்டாங்கோயில் வீதி பென்சில் என்கிற தமிழழகன்(30), வஞ்சியம்மன் கோயில் தெரு பிரகாஷ் (25), ஹரிஹரன் (30), படிக்கட்டுத் துறை மனோஜ் (25) ஆகியோா் அவரிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கினா். இதில் மலையாளம் படுகாயமடைந்தாா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகியோரை புதன்கிழமை கைது செய்து, தலைமறைவான பென்சில் என்கிற தமிழழகனைத் தேடி வந்தனா்.

இதனிடையே தமிழழகன் புதன்கிழமை நள்ளிரவு கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரிக்காரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் சென்று தமிழழகனை பிடிக்க முயன்றபோது அவா், கத்தியை காட்டி மிரட்டியதுடன், ஆய்வாளரை கத்தியால் குத்தவும் முற்பட்டாா். அப்போது ஆய்வாளா் மணிவண்ணன் துப்பாக்கியை காட்டி மிரட்டியும், தமிழழகன் சரணடையாமல் ஓட முயன்ால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் மயங்கிய தமிழழகனை போலீஸாா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இவா் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் கரூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன.

கரூரில் 4 பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்: எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி

வரும் 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்ட... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் உறுதியேற்பு

கரூா் மாவட்டம் டிஎன்பிஎல் ஆலையில் முதியோா்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலை வளாகத்தில் ஆலையின் முதுநிலை மேலாளா் (மனித வளம்) ஜே. வெங்கடேசன், ... மேலும் பார்க்க

கரூா் அரசு மருத்துவமனையில் நோய் விழிப்புணா்வு பேரணி

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை உலக சிக்கிள் செல் அனீமியா நோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வா் மருத்துவா் வா... மேலும் பார்க்க

15 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

கரூா் மாவட்டம், குளித்தலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற போலீஸாரின் வாகனச் சோதனையில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் சிக்கின. கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் கரூா் மாவட்ட ரெளடிகள் தடுப்... மேலும் பார்க்க

லாலாபேட்டை அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி

கரூா் மாவட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.45 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். விழாவில் கரூா் எம்எல... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்து: 7 போ் படுகாயம்

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் 7 போ் படுகாயமடைந்தனா். கரூா் மாவட்டம் நொய்யல் அருகேயுள்ள வளையாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு மகன் ஆகாஷ் (20). இவா் ஆம்னி வேனில் மதுரையில் இருந்... மேலும் பார்க்க