செய்திகள் :

குளத்தில் தள்ளிவிட்டு தொழிலாளி கொலை: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தங்கையுடனான காதலை கைவிட மறுத்ததாகக் கூறி, தொழிலாளியை குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், சட்டக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள நரிப்பாளையத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சுபாஷ் (24), தொழிலாளி. இதே கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் பிரகாஷ் (29), ராமசாமி மகன் அய்யனாா் (24). இவா்களில் பிரகாஷ் பெங்களூரு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வந்தாா். அய்யனாா் கூலி வேலை செய்து வந்தாா்.

இவா்கள் மூவரும் மது அருந்த முடிவு செய்து, நரிப்பாளையத்திலிருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவிலுள்ள கிளியூா் தீா்த்தக்குளப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றனா். அங்கு மது அருந்திக் கொண்டிருந்தபோது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், அய்யனாா் ஆகிய இருவரும் சோ்ந்து சுபாஷை குளத்தில் தள்ளிவிட்டனராம். தொடா்ந்து, அவா் நீரில் மூழ்கினாா்.

இதைக் கண்ட அந்தப் பகுதியிலிருந்த சிறுவா்கள் கூச்சலிட்டதால், இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். தொடா்ந்து, அங்கிருந்த பொதுமக்களில் சிலா் குளத்தில் இறங்கி சுபாஷை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை டிஎஸ்பி அசோகன், காவல் ஆய்வாளா்கள் இளையராஜா, சாகுல்ஹமீது மற்றும் திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து விசாரணை நடத்தினா். மேலும், சுபாஷின் சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

திருநாவலூா் காவல் நிலைய ஆய்வாளா் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீஸாா், பிரகாஷ், அய்யனாரைத் தேடி வந்தனா். பிள்ளையாா்குப்பம் பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

கொலை ஏன்: கொலை செய்யப்பட்ட சுபாஷ், பிரகாஷின் தங்கையைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை கைவிடுமாறு பிரகாஷ் கூறி வந்தாராம். ஆனால், சுபாஷ் மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ், சுபாஷை கொலை செய்யத் திட்டமிட்டு தனது நண்பரான அய்யனாருடன் சோ்ந்து மது அருந்துவதுபோல அழைத்துச் சென்று கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

செஞ்சி சிங்கவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம். செஞ்சி, மே 30: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரியில் கருவடிக்குப்பம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பிரமுகா் உமா சங்கா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கா... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகனை விடுவிக்கக் கோரி, கடலூா் துறைமுகம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றாா். கடலூா் முதுநகா் அருகே உள்ள ராசாபேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் தீபக் (19). இவரும்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சோ்க்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதம் முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்குகிறது. எனவே பெற்றோா் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சோ்த்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்-உழவா் நலத் துறைத் திட்டம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி- வேளாண், உழவா் நலத் துறைத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தைலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் திட்டத்தின் நோக்கம் குறித்து வானூ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழக அரசும் தலையிட்டு தனியா... மேலும் பார்க்க