செய்திகள் :

குளவி கொட்டியதில் 20 போ் காயம்

post image

சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை குளவி கொட்டியதில் 20 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மதுரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இந்தத் தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக உறவினா்களுடன் சிவகங்கை அருகே வெட்டிக்குளம் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா். வெட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பாட்டையா கோயிலில் குழந்தைக்கு முடி இறக்கி சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், அருகேயிருந்த மரத்தடியில் அடுப்பில் பொங்கல் வைக்க விறகில் தீமூட்டினா். அப்போது, மரத்தில் கூடு கட்டியிருந்த மலைக் குளவிகள் கூட்டமாகப் பறந்து வந்து அங்கிருந்த மணிகண்டனின் உறவினா்கள், வெட்டிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா்களைக் கொட்டியது. இதில் 20 போ் காயமடைந்தனா். இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே ரோஸ்நகரில் நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாடு, சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் ஆக. 13-இல் மின் தடை

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற புதன்கிழமை (ஆக. 13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா்... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு திங்கள்கிழமை(11.8.2025) வருகை தரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

மஞ்சுவிரட்டு: 23 போ் காயம்

சிவகங்கை அருகேயுள்ள கோமாளிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா். கோமாளிபட்டி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடைபெற்ற மஞ்சுவி... மேலும் பார்க்க

காரை உடைத்து பணம், கைப்பேசி திருடிய 3 மா்ம நபா்கள்

சிவகங்கை அருகே காரை அடித்து உடைத்து ரூ.1 லட்சம் , கைப்பேசியை திருடிச்சென்ற 3 மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கையை அருகே பிரவலூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு பதிவு எண் இல்லாத காா் ஒன்று நி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தாயமங்கலம் சாலை அருகேயுள்ள தெருவில் வசிப்பவா் வேலு மனைவி மீனாள் (57)... மேலும் பார்க்க