செய்திகள் :

குளித்தலை: வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கி பணம், நகை கொள்ளை; பள்ளி தாளாளர் வீட்டில் பயங்கரம்

post image

பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி, இவரது மனைவி சாவித்திரி.

கருணாநிதி குளித்தலை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்னர், ஒரு மணி அளவில் அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். மேலும், அவரது வீட்டில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பின்பகுதி வழியாக முகமூடி அணிந்து நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்.

police

ரூ.9 லட்சம் பணம், 32 பவுன் தங்க நகை கொள்ளை

அப்போது, அவர்களின் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதியின் இளைய மகளான பல் மருத்துவர் அபர்ணா விழித்து பார்த்தபோது, அங்கு மூன்று இளம் வயது கொண்ட மர்ம நபர்கள் கத்தி, அரிவாளால் சகிதம் நின்றுள்ளனர்.

அதோடு, அவர்களை மிரட்டி தாக்கி ரூ.9 லட்சம் பணம் மற்றும் 32 பவுன் தங்க நகைகளை அந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அதோடு, இது குறித்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த மூவரின் செல்போன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

குற்றச் சம்பவ பின்னணி - போலீசார் விசாரணை

இதில் பல் மருத்துவர் அபர்ணா மற்றும் அவரை அரிவாளால் தாக்க முயன்ற போது தடுக்க வந்த அவரது தாய் சாவித்திரி ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதனால், அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா மற்றும் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பணம், மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதோடு, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டனர். இதில், மோப்பநாய் லக்கி சம்பவ இடத்திலிருந்து குளித்தலை - மணப்பாறை ரயில்வே கேட் வரை மோப்பம் பிடித்தபடி சென்று நின்று விட்டது.

இதற்கிடையில், ஏற்கெனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தோகைமலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட 4 இளம் வயது ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.

dog

பல்வேறு குற்றச் சம்பவ பின்னணியில் உள்ள அவர்களின் கூட்டாளிகள் பலரும் இப்பகுதியில் பதுங்கி இருந்து சம்பவத்தை செய்து இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

இதனால், கொள்ளை நடந்த வீட்டில் உள்ள சி.சி.டி.வி மற்றும் குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

குளித்தலை நகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள மையப் பகுதியில் உள்ள வீட்டில் அதிகாலையில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: ஆன்லைனில் ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்த மூதாட்டி; ரூ.18 லட்சத்தை இழந்த `அதிர்ச்சி' சம்பவம்!

மும்பையில் பால் ஆர்டர் செய்ய முயன்ற மூதாட்டி ஒருவர் 18.5 லட்ச ரூபாயை இழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.மும்பை வாடாலா பகுதியைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைன் டெலிவரி ஆப் ஒன்றில... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் ரூ.75 கோடி மோசடி' - நடிகை ஷில்பா ஷெட்டி மீது FIR பதிவு செய்த காவல்துறை

நடிகை ஷில்பா ஷெட்டி - அவரின் கணவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபர... மேலும் பார்க்க

Sandeepa Virk: `ரூ.40 கோடி மோசடி' ED ரெய்டில் இன்ஃப்ளூயன்சர் கைது - என்ன நடந்தது?

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பணமோசடி தொடர்பாக மும்பை, டெல்லியில் இரண்டு நாள்கள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண் தொழிலதிபர் சந்தீபா விர்க் பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னை... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி: `ரூ.200 கோடி முறைகேடு' வரி மோசடி வழக்கில் மேயரின் கணவர் கைது - என்ன நடந்தது?

மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகராட்சியில் உயர் அலுவலர்களின் பாஸ்வேர்டை பயன்ப... மேலும் பார்க்க

``ரூ.25 லட்சம் மோசடி'' - தயாரிப்பாளரை செருப்பால் அடித்த பாலிவுட் நடிகை.. என்ன நடந்தது?

பாலிவுட் நடிகை ருச்சி குஜார், `தயாரிப்பாளர் கரண் சிங் செளகான் என்பவர் ரூ.24 லட்சம் மோசடி செய்துவிட்டதாக' போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து மும்பை ஓசிவாரா போலீஸார் தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு... மேலும் பார்க்க

Chanda kochhar: `லஞ்சம் வாங்கியது உறுதி' - ICICI வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஊழல் அம்பலம்

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுத... மேலும் பார்க்க