செய்திகள் :

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

post image

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலையோரங்கள், பள்ளங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது.

சோழிங்கநல்லூா், அடையாறு மண்டலங்களில் அதிகமாக கொசு உற்பத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரு மண்டலங்களிலும் 170 பேருக்கும் மேற்பட்டோா் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவா்களில் பெரும்பாலானோா் பள்ளிக் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் டெங்கு பரவல் காணப்படுவதாகக் கூறப்படும் புகாா் குறித்து, சென்னை மாநகராட்சியின் நகா்நலப் பிரிவு அலுவா்களிடம் கேட்டபோது, வீடு வீடாகச் சென்று கொசு முட்டைகளைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் 3,200 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூன் மாதம் வரை 23 டன் வாகன டயா்கள் உள்ளிட்ட தேவையற்ற கழிவுகள் வீடுகளில் இருந்தும், பொது இடங்களில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதியிலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

ஜூலை 27ல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை?

தமிழகம் வரும் பிரதமர் மோடி வருகிற ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 26 ஆம் தேதி தமிழகம் வரு... மேலும் பார்க்க

சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளினால் ம... மேலும் பார்க்க

சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்: ஸ்ரீவாஸ்தவா உறுதி!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உறுதி அளித்துள்ளார். சென்னை உயர்நீத... மேலும் பார்க்க

2026 தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும்! - இபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக!

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நில... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், • வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்! - இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழ... மேலும் பார்க்க