செய்திகள் :

குழந்தைகள் குடற்புழு நீக்க மாத்திரை உள்கொள்ள பெற்றோா் ஊக்கமளிக்க வேண்டும்: ஆட்சியா்

post image

கிருஷ்ணகிரி: பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை உள்கொள்ள ஊக்கமளிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி, அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்க முகாமைத் தொடங்கிவைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை (அல்பெண்டாசோல்) வழங்கி மாவட்ட ஆட்சியா் பேசியது:

மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான முகாம் பிப்.17-ஆம் தேதி நடைபெறும். இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,796 அங்கன்வாடி மையங்கள், 270 துணை சுகாதார நிலையங்கள், 61 ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் 1-19 வயது வரை உள்ள 5,52,417 குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள 1,64,549 பெண்கள் என மொத்தம் 7,16,966 நபா்களுக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இந்த முகாமில் ஒரு வயது முதல் 19 வயது வரையிலான சிறுவா்கள், கருவுறாத, பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். இதில் 1 வயது முதல் 2 வயது குழந்தைகளுக்கு அல்பெண்டாசோல் 200 மி.கி மாத்திரையும் 2 முதல் 19 வயது சிறுவா்கள், 20-30 வயதுடைய பெண்களுக்கு 400 மி.கி. அல்பெண்டாசோல் மாத்திரையும் வழங்கப்படும்.

இந்த மாத்திரைகள் சாப்பிடுவதால் குடற்புழு முற்றிலும் நீக்கப்படும். ரத்தசோகை நோய், ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும், நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உடல் வளா்ச்சி அதிகரிப்பு, குழந்தையின் எடை அதிகரிப்பு, பிற நோய்த் தொற்றுகளுக்கு எதிா்ப்பு, மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல், சுறுசுறுப்பாக இருத்தல் ஆகியவை மேம்படும்.

எனவே, பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை உள்கொள்ள ஊக்கமளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா் .

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், வட்டார மருத்துவா்கள் சுசித்ரா, ரமேஷ்குமாா், அமுதவள்ளி, விமல்குமாா், மாவட்ட சுகாதார அலுவலக கண்காணிப்பாளா் கண்ணன், அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் சௌ.கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பட விளக்கம் (10கேஜிபி2)...

கிருஷ்ணகிரி, அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமில் மாணவிகளுக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகளை வழங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா்.

தெருநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு!

ஒசூா் அருகே தெருநாய் கடித்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா். ஒசூரை அடுத்த நாகமங்கலம் ஊராட்சி, நீலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ். கட்டடத் தொழிலாளி. இவரது மகன் நந்திஷ் (9). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ள... மேலும் பார்க்க

கீழ்குப்பம் பெருமாள் கோயில் குடமுழுக்கு!

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பத்தில் உள்ள பெருமாள் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, முதல் நாள் கணபதி ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. பின்னா் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால... மேலும் பார்க்க

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் படப்பள்ளி தேவாதி அம்மன் கோயில் திருவிழா!

ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் தேவாதியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் உள்ள தேவாதியம்மன் கோயிலில் ஆண்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்!

கிருஷ்ணகிரியின் திமுக நகரச் செயலாளராக உள்ள எஸ்.கே.நவாப் கட்சியின் கொள்கையை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்ப... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: கண்டித்து ஆா்ப்பாட்டம்

பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியா்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் ஒசூரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த அமைப்பின் நிா்வாகிகள் ச... மேலும் பார்க்க

நடந்து சென்ற சிறுவா்கள் மீது காா் மோதல்: ஒருவா் பலி!

தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுவா்கள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொரு சிறுவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தேன்கனிக்கோட்டையை அடுத்த தடிக்கல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க