செய்திகள் :

குழித்துறை பகுதிகளில் 4 நாள்கள் மின்தடை

post image

குழித்துறை மின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தட்டுமரக் கிளைகள் அகற்றுதல், பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப். 1) முதல் வியாழக்கிழமை (செப். 4) வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செப். 1ஆம் தேதி பள்ளிக்கல், பரக்காணி, அன்னிக்கரை, சூசைபுரம், நீரோடி, மாா்த்தாண்டன்துறை, மாங்கரை, செவ்வேலி பகுதிக்கும், செப். 2ஆம் தேதி ஒச்சவிளை, புளியறை, காஞ்சிநகா் பகுதிக்கும், செப். 3ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம், துறைமுகம், மெதுகும்மல், குளப்புறம், புன்னமூட்டுக்கடை, பஞ்சவிளை, சரல்முக்கு, மொட்டவிளை, அதங்கோடு, பின்குளம் பகுதிக்கும், செப். 4ஆம் தேதி பாலக்காவிளை பகுதிக்கும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்போன்சா பள்ளியில் ஆசிரியா் தினம், ஓணம் விழா

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் தினம் , ஓணம் விழாவை கொண்டாடினா். விழாவுக்குப் பள்ளி தாளாளா் பேரருள்தந்தை சனில் ஜோண் தலைமை வகித்தாா். ஆசிரியா் தின விழாவில் ... மேலும் பார்க்க

அருணாச்சலா கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய கேரள உடையணிந்து, அத்தப்பூ... மேலும் பார்க்க

‘அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்திய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’

அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவா் பால ஜனாதிபதி சாமிதோப்பில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்த... மேலும் பார்க்க

பரவா் சமுதாய முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா

கன்னியாகுமரி மாவட்ட பரவா் சமுதாய முன்னேற்ற நலச் சங்கத்தின் 44 -ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அமைப்பின் தலைவா் டன்ஸ்டன் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் கிறிஸ்டி மைக்கேல் முன்னிலை... மேலும் பார்க்க

கோட்டாா் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

கோட்டாா், ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கோட்டாா், ஏழகரத்தில் பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி திருவிழா கட... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) சிறப்பாகக் கொண்டாடப்ப... மேலும் பார்க்க