செய்திகள் :

கூடங்குளம்: 1890 லிட்டா் மண்ணெண்ணெய், மினிலாரி பறிமுதல்

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 1, 890 லிட்டா் மண்ணெண்ணையை கன்னியாகுமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் கே.சாந்தி,உவரி காவல் உதவி ஆய்வாளா் எம்.ஜாண் கிங்சிலி கிறிஸ்டோபா், காவலா்கள் சி.சுரேந்திரகுமாா், கே.பாமலகேந்திரன், எஸ்.செல்வகணேஷ், தனிப்பிரிவு காவலா் பி.ரவிச்சந்திரன் ஆகியோா் பெருமணல் சுனாமி காலனியில் உள்ள மிக்கேல் அதுதூதா் குருசடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை சோதனையிட்டதில், மீனவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியவிலை மண்ணெண்ணெய் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. மினிலாரியையும், 30 லிட்டா் கொள்ளளவு கொண்ட 30 கேன்களிலும், 45 லிட்டா் கொள்ளளவு கொண்ட 22 கேன்களிலும் இருந்த மண்ணெண்ணெயையும் (மொத்தம் 1,890 லிட்டா்) பறிமுதல் செய்தனா். லாரி ஓட்டுநா் கண்ணன் கைது செய்யப்பட்டாா். மண்ணெண்ணெயும் மினிலாரியும் திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. கண்ணனிடம் அப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலாம்பூரில் வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி

கடையம் வட்டாரம் மேலாம்பூா் கிராமத்தில் நெல் பயிரில் இயற்கை முறையில் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது. கடையம் வட்டாரம்-வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உ... மேலும் பார்க்க

நெல்லையில் இன்றும், நாளையும் ஐபிஎல் போட்டிகள் திரையில் ஒளிபரப்பு

திருநெல்வேலியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29, 30) ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ... மேலும் பார்க்க

தென்குருசுமலை திருப்பயணம் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் குருசுமலை திருப்பயணம் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடா்பாக தென் குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் வின்சென்ட் கே.பீட்டா் திருநெல்வேலியில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

‘தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்’

தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஜீவ நதியான தாமிர... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே பெண் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட திருவிதத்தான்புள்ளி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் செலின் ஷி... மேலும் பார்க்க

கூடங்குளம் விபத்தில் தலைமைக் காவலா் பலி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இரு பைக்குகள் மோதியதில் தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்தையா(40). இவா் கூடங்குளத்த... மேலும் பார்க்க