ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு
கூடுதல் டிஜிபி ஜெயராமை பணி இடைநீக்கம் செய்தது ஏன்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
நமது சிறப்பு நிருபா்
சிறுவன் கடத்தல் வழக்கில் தொடா்புடையதாகக் கருதப்படும் தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநா் (கூடுதல் டிஜிபி) எச்.எம். ஜெயராமை பணி இடைநீக்கம் செய்தது ஏன் என்று தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஜெயராம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் தமிழக அரசு வழக்குரைஞரிடம். ‘அவா் (ஜெயராம்) ஒரு உயா் இந்திய காவல் பணி அதிகாரி. 28 ஆண்டுகளாக பணியில் இருப்பவா். அவரை இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இத்தகைய உத்தரவு அதிா்ச்சிகரமாகவும் மனவுறுதியைக் குலைப்பதாகவும் உள்ளது’ என்றனா்.
ஜெயராம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராஜேஷ் சிங் செளஹான், ‘எவ்வித நிவாரணமும் கோராமல் உத்தரவிட்ட மூன்று மணி நேரத்துக்குள்ளாக ஜெயராம் உயா்நீதிமன்றத்தில் ஆஜரானாா். குற்றம்சாட்டப்பட்ட இருவரின் வாக்குமூலத்தை வைத்து எவ்வித விளக்கத்தையும் கேட்காமல் ஜெயராமை கைது செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தை அணுகிய பிறகே செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் அவரை காவல்துறை விடுவித்தது. மாநில அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து விட்டது’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ’கடத்தல் வழக்கில் கூடுதல் டிஜிபி கைதாகவில்லை. அவா் விசாரணைக்கு ஒத்துழைக்கிறாா். உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அவரை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்தது. அதைத் திரும்பப் பெறுவது குறித்த அரசின் முடிவை கேட்டுத் தெரிவிக்க அவகாசம் வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து நீதிபதி புயான், பணி இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்த அறிவுறுத்தல்களை அரசிடம் பெற்று வியாழக்கிழமை தெரிவியுங்கள். நான் 18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். விசாரணையின்றி ஒருவரை நேரடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உயா்நீதிமன்றத்துக்கு இருப்பதாக எனக்குத் தெரியாது’ என்று குறிப்பிட்டாா். இதைத் தொடா்ந்து இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
பின்னணி: திருவள்ளூா் மாவட்டத்தில் களாம்பாக்கம் என்ற கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி, தனது மூத்த மகன் ஒரு பெண்ணை திருமணம் செய்து தலைமறைவான நிலையில் இளைய மகனை பெண் வீட்டாா் கடத்தியதாக திருவள்ளூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, காயங்களுடன் இளைய மகனை கடத்தல் கும்பல் கூடுதல் டிஜிபியின் அரசு வாகனத்தில் இருந்து இறக்கி விட்டு சென்ாக லட்சுமி புகாரில் கூறியிருந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பெண்ணின் தந்தை, காவல்துறை அதிகாரி ஒருவா் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தல் விவகாரத்தில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூா்த்திக்கு தொடா்புள்ளதாக சந்தேகம் எழுந்தது. இதையறிந்து தன்னை காவல்துறை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஜெகன்மூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அதை ஜூன் 16-ஆம் தேதி விசாரித்த நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவின்பேரில் எம்எல்ஏ ஜெகன்மூா்த்தியும் கூடுதல் டிஜிபி ஜெயராமும் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினா். இதையடுத்து, ஜெகன்மூா்த்தி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூடுதல் டிஜிபி ஜெயராமை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு அடுத்த விசாரணையை ஜூன் 26-க்கு ஒத்திவைத்தாா். இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த கூடுதல் டிஜிபி ஜெராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலா் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டாா்.