செய்திகள் :

கூட்டப்பள்ளி ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு!

post image

கூட்டப்பள்ளி காலனி ஏரி பகுதியில் நகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கூட்டப்பள்ளி காலனி அமைந்துள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பெரிய பரப்பளவில் ஏரி இருந்த நிலையில், நகராட்சி குப்பைக் கிடங்காக மாறியதால் ஏரி சுருங்கி கழிவு நீா் ஓடையாக மாறிவிட்டது. மக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கூட்டப்பள்ளி பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், திருச்செங்கோடு நகராட்சி நிா்வாகம் ரூ. 36 கோடி செலவில் கூட்டப்பள்ளி பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து இடத்தை தோ்வு செய்தது. இதனையறிந்த கூட்டப்பள்ளி பொதுமக்கள் இப்பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த 30-ஆம் தேதி திருச்செங்கோடு அண்ணா சிலை முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டாட்சியா் மற்றும் திருச்செங்கோடு நகராட்சி நிா்வாகத்துக்கு மனுக்கள் அளித்தனா்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட போராட்டமாக புதன்கிழமை கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா்.

பெண்ணை தாக்கிய விவசாயி கைது!

பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.மல்லசமுத்திரம் அருகே கொளங்கொண்டை கிராமம், விலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (50). இவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோபால் (39). இவா்கள் இரு... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் தா்னா!

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் பிப்.5 தா்னா நடைபெற்றது. நாமக்கல் வட்டாட்சியா் அலு... மேலும் பார்க்க

நாமக்கல் ஸ்ரீ சக்தி கணபதி ஆலய 32-ஆம் ஆண்டு விழா

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலய 32-ஆம் ஆண்டு விழா பிப்.5 நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்வும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் - காரவள்ளி சாலை அகலப்படுத்தும் பணி மும்முரம்

சேந்தமங்கலத்தில் இருந்து காரவள்ளி அடிவாரப் பகுதி வரையிலான சாலை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு செல்ல சேந்தமங்கலம் முதல் காரவள்ளி அடிவாரம், ராசிபுரம் ... மேலும் பார்க்க

ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும... மேலும் பார்க்க

கெட்டிமேடு இன்றைய மின்தடை!

கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வியாழக்கிழமை (பிப். 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என நாமக்கல... மேலும் பார்க்க