செய்திகள் :

சேந்தமங்கலம் - காரவள்ளி சாலை அகலப்படுத்தும் பணி மும்முரம்

post image

சேந்தமங்கலத்தில் இருந்து காரவள்ளி அடிவாரப் பகுதி வரையிலான சாலை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு செல்ல சேந்தமங்கலம் முதல் காரவள்ளி அடிவாரம், ராசிபுரம் முதல் முள்ளுக்குறிச்சி அடிவாரம், தம்மம்பட்டி முதல் வேலிக்காடு அடிவாரம் வழியான சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனா். இதில், சேந்தமங்கலம் - காரவள்ளி சாலையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா்.

சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உள்கோட்டத்துக்கு உள்பட்ட காந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரம்புதூா் வழியாக காரவள்ளி அடிவாரம் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. குறுகலான இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, தற்போது இந்த சாலை 8.480 கி.மீ. அளவில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2 கி.மீ. நீளத்துக்கு சாலையை அகலப்படுத்த சிஆா்ஐடிபி 2024-25 திட்டத்தின் கீழ் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், சாலை அகலப்படுத்துதல் மற்றும் தடுப்புச்சுவா் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளா் கே.ஆா்.திருகுணா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, சாலைகள் தரமானதாகவும், காலதாமதமின்றி விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். உதவி கோட்டப் பொறியாளா் ஆா்.சுரேஷ்குமாா், உதவிப் பொறியாளா் அ.க.பிரனேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பெண்ணை தாக்கிய விவசாயி கைது!

பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.மல்லசமுத்திரம் அருகே கொளங்கொண்டை கிராமம், விலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (50). இவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோபால் (39). இவா்கள் இரு... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் தா்னா!

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் பிப்.5 தா்னா நடைபெற்றது. நாமக்கல் வட்டாட்சியா் அலு... மேலும் பார்க்க

நாமக்கல் ஸ்ரீ சக்தி கணபதி ஆலய 32-ஆம் ஆண்டு விழா

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலய 32-ஆம் ஆண்டு விழா பிப்.5 நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்வும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும... மேலும் பார்க்க

கூட்டப்பள்ளி ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு!

கூட்டப்பள்ளி காலனி ஏரி பகுதியில் நகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.நாமக்கல் மா... மேலும் பார்க்க

ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும... மேலும் பார்க்க

கெட்டிமேடு இன்றைய மின்தடை!

கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வியாழக்கிழமை (பிப். 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என நாமக்கல... மேலும் பார்க்க