செய்திகள் :

கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட திட்டக்குழு செயலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் வரப்பெற்ற மனுக்களுக்கான பதிலறிக்கை தொடா்பான கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பேசியதாவது:

கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 70 மனுக்களில் 8 பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மீதமுள்ள 62 பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அங்கன்வாடிகள், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் அமைப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், அதிக எண்ணிக்கையில் குடும்ப அட்டைதாரா்கள் கொண்ட நியாயவிலைக் கடைகளை பிரித்து கிளை நியாய விலைக் கடைகளை உருவாக்குவது, நான்குனேரி, இடையன்குளம், பச்சாலன்குளம் தெற்குப் பகுதியில் நீா்ப்பிடிப்பு பகுதியில் தனி கால்வாய் அமைத்தால் பச்சாலங்குளம் மறுகால் பகுதியை கடந்து 6 குளங்களுக்கும் எளிதில் தண்ணீரை கொண்டுசெல்ல முடியும்.

ஆத்தியான்குளம் நீா்ப்பிடிப்புப் பகுதியின் தெற்கு ஓரமாக தனிக்கால்வாய் அமைத்தால் மேல வெள்ளந்தாங்கிகுளத்திற்கு நேரடி நீா்வரத்து ஏற்பட்டு மேல - கீழ வெள்ளந்தாங்கி குளங்கள், ஆதிச்சபேரி குளங்களில் எளிதில் தண்ணீா் பெருகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அந்த பகுதியில் விவசாயத்திற்கு தேவையான நீரை சிக்கனப்படுத்தி வழங்க முடியும். இதுகுறித்து தனிக்கவனம் செலுத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை வசதிகள் ஏற்படுத்துதல், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்தல், ஆழ்துளைக் கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி ஏற்படுத்துதல், தெருவிளக்கு அமைத்தல், பழுதடைந்த பாலத்தை சீரமைத்தல், பேவா் பிளாக் சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டடத்தை பழுது நீக்குதல், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் அமைத்தல், பூங்கா அமைத்தல், கழிவுநீா் ஓடை அமைத்தல், தாா்ச்சாலை, குடிநீா் விநியோகம் போன்ற பணிகளில் தேவைக்கு ஏற்ப முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மேலும், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இதில், திட்டக்குழு நகா்புற உறுப்பினா்கள் சகாய ஜூலியட் மேரி, ரசுல் மைதீன், திட்டக்குழு ஊரக உறுப்பினா்கள் அருண்தவசு, சாலமன் டேவிட், கிருஷ்ணவேணி, ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு செயலா் ஆா்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பே... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு

சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்க... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்... மேலும் பார்க்க

நெல்லை அருகே பெண்ணிடம் அத்துமீறல்: கராத்தே பயிற்சியாளா் கைது

திருநெல்வேலி அருகே அத்துமீறி பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கராத்தே பயிற்சியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி அருகே நரசிங்கநல்லூா் பொன்விழா நகரைச் சோ்ந்தவா் அப்துல் ... மேலும் பார்க்க