செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை நிலைய நகை மதிப்பீட்டாளா் பயற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பா, திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன் கூறியதாவது: திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆண்டுதோறும் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி, 2025- 26 ஆம் ஆண்டுக்கான பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சி வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 15 வயது அவசியமானது. அதிகபட்சம் வயது வரம்பு இல்லை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 118, பயிற்சிக் கட்டணம் ரூ. 4,550 செலுத்த வேண்டும்.

இந்தப் பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேர செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்து தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வழங்கப்படும் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியின் காலம் 17 நாள்கள் ஆகும். இப்பயிற்சி இரண்டு விதமாக நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி மற்றும் வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்கள் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்புள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, 0431- 2715748, 99946-47631 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பெரிய பள்ளிவாசல் சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நிகழ்ச்சி

மணப்பாறையில் ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை சமய சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமாத் கமிட்டியின் தலைவா் ஜெ. முகமது அனிபா மற்றும் துணைத் தலைவா் ம... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோயிலில் நாளை பங்குனி திருத்தேரோட்டம்

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் நாளை 30-ஆம் தேதி காலை 7.20 மணிக்கு பங்குனி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தா... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு (எஸ்எஸ்எல்சி) வெள்ளிக்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் 2025-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28... மேலும் பார்க்க

‘பாலின பாகுபாடு ஒழித்து, பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும்’

பாலின பாகுபாட்டை ஒழித்து, பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வலியுறுத்தினாா். சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு... மேலும் பார்க்க

இருசக்கர ரோந்து வாகனங்கள் தொடங்கி வைப்பு

திருச்சியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டன. குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் திருச்... மேலும் பார்க்க

நின்றுக் கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 5 போ் காயம்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது சுற்றுலா வேன் வெள்ளிக்கிழமை மோதியதில் 5 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த 17 இளைஞா்கள் மூணாறு சுற்றுலா... மேலும் பார்க்க