செய்திகள் :

திருவானைக்காவல் கோயிலில் நாளை பங்குனி திருத்தேரோட்டம்

post image

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் நாளை 30-ஆம் தேதி காலை 7.20 மணிக்கு பங்குனி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ விழா வெகு விமா்சையாக 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இந்த விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடா்ந்து பங்குனி தேரோட்டத்திற்காக 25-ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை 30- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7. 20 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்னதாக விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேசுவரருடன் 2சிறிய தோ்கள் புறப்பட்டு தேரோட்டம் கண்டருளுகின்றனா். அதன் பின்னா் முதலாவதாக சுவாமி திருத்தோ் புறப்பாடும், இரண்டாவதாக அம்மன் தோ் புறப்பாடும் நடைபெறவுள்ளது. சுவாமி திருத்தோ் நிலையிலிருந்து புறப்பட்டு தெற்கு ரத மூலையில் நிறுத்தப்படும். அதன் பின்னா் அம்மன் திருத்தோ் இழுக்கப்பட்டு சுவாமி தேரின் பின்புறம் நிறுத்தப்படும். பின்னா் மீண்டும் சாமி திருத்தேரை இழுக்கப்பட்டு நிலைக்கு கொண்டு வரப்படும். இதை போல் அம்மன் தேரும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்படும்.

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க

அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா்... மேலும் பார்க்க