செய்திகள் :

இருசக்கர ரோந்து வாகனங்கள் தொடங்கி வைப்பு

post image

திருச்சியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டன.

குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் திருச்சி மாநகர காவல்துறைக்கு வழங்கப்பட்டது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி தொடங்கி வைத்தாா். அப்போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

இந்த இருசக்கர வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காவேரி பாலம், கொள்ளிடம் பாலம் ஆகிய பகுதிகளில் ரோந்து செய்து, குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும், பொதுமக்களிடமிருந்து வரும் அவசர அழைப்புகளுக்கு நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சட்டரீதியான துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க

அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா்... மேலும் பார்க்க