செய்திகள் :

நின்றுக் கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 5 போ் காயம்

post image

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது சுற்றுலா வேன் வெள்ளிக்கிழமை மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த 17 இளைஞா்கள் மூணாறு சுற்றுலா செல்வதற்காக வேன் ஒன்றில் வியாழக்கிழமை இரவு புறப்பட்டனா். இந்த வேன் வெள்ளிக்கிழமை அதிகாலை, மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. புதுவாடிபுதூா் என்ற பகுதியில் சென்றபோது, அப்பகுதியில் சாலையோரம் திருவண்ணாமலையிலிருந்து தேனிக்கு உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி பழுதாகி நின்றிருந்த நிலையில், லாரியின் பின்னால் சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணித்த மருதங்கம் விடுதியைச் சோ்ந்த கருணாநிதி மகன் அருள்(22), தீத்தானிபட்டியைச் சோ்ந்த கோகுல் (20) உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அருள், கோகுல் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

விபத்து குறித்து லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், கண்டியாங்குப்பம் பழனி மகன் கண்ணதாசன் மீது வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க

அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா்... மேலும் பார்க்க