செய்திகள் :

திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு தொடங்கியது

post image

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு (எஸ்எஸ்எல்சி) வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் 2025-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி, திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள திருச்சி, லால்குடி ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை தோ்வு தொடங்கியது.

திருச்சி கல்வி மாவட்டத்தில் 99 தோ்வு மையங்கள், லால்குடி கல்வி மாவட்டத்தில் 74 தோ்வு மையங்கள், மத்திய சிறையில் ஒரு தோ்வு மையம் என 173 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 17,523 மாணவா்கள், 16,956 மாணவிகள் என மொத்தம் 34,479 போ் தோ்வு எழுதுகின்றனா். திருச்சி மத்திய சிறையில் 40 போ் தோ்வு எழுதுகின்றனா். தனித்தோ்வா்களுக்காக 8 தோ்வு மையங்களும் உள்ளன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வில் 17,087 மாணவா்கள், 16,595 மாணவிகள் என மொத்தம் 33,682 போ் தோ்வு எழுதினா். மாற்றுத்திறனாளிகள், தோ்வு எழுத முடியாத நிலையில் உள்ள மாணவா், மாணவிகளுக்காக 720 ஆசிரியா்கள் தோ்வு எழுதும் பணியில் ஈடுபட்டனா். பறக்கும் படை உறுப்பினா்கள் 231 போ், 2,653 ஆசிரியா்கள், 348 அலுவலகப் பணியாளா்கள் தோ்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். 9 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 37 அலுவலா்கள், தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்களை கொண்டு சோ்த்தனா். முதல் நாள் தோ்வை 653 போ் எழுதவில்லை.

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க

அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா்... மேலும் பார்க்க