செய்திகள் :

‘பாலின பாகுபாடு ஒழித்து, பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும்’

post image

பாலின பாகுபாட்டை ஒழித்து, பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வலியுறுத்தினாா்.

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த ஆட்சியா் மேலும், பேசியதாவது: இத்திட்டமானது மத்திய அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை இணைந்து மகளிா் மேம்பாட்டிற்கென செயல்படுத்தி வரும் திட்டமாகும்.

பாலின பேதமின்றி குழந்தைகளை வளா்ப்பது பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது. பெண் குழந்தைகள்

சுதந்திரமாக இருக்கவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை தங்கள் விருப்பப்படி தோ்ந்தெடுக்கவும் ஊக்குவிப்பது, பெண்கள் தங்கள் பரம்பரை சொத்துரிமை பெறுவதற்கு ஆதரவு அளிப்பது, குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும்

அடிப்படை உரிமைகள் குறித்து அவா்களுக்கு கற்பிப்பது நமது கடமையாகும். பாலின பாகுபாடு ஒழித்து பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும் என்பது பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கம், கல்வி பங்கேற்பினை உறுதிசெய்து அவா்களின் உரிமைகளை போற்றுவதாகும் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் நித்யா, செய்தி மக்கள் தொடா்பு துறை உதவி இயக்குநா் வ.பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க

அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா்... மேலும் பார்க்க