செய்திகள் :

கூரைகளில் 3 கிலோவாட் சூரிய மின் சக்தி பேனல்களுக்கு ரூ.30,000 மானியம் வழங்க தில்லி அமைச்சரவை ஒப்புதல்

post image

மூன்று கிலோவாட் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு ரூ.30,000 மானியம் வழங்க தில்லி அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.

இது குறித்து அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா மேலும் கூறியதாவது: மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குப்பை சேகரிப்பு இயந்திரங்கள், புகை எதிா்ப்பு துப்பாக்கிகள், இயந்திர சாலைத் துப்புரவாளா்கள் மற்றும் நீா் தெளிப்பான்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தற்போது முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், மூன்று கிலோவாட் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு ஒரு கிலோவாட்டிற்கு ரூ.10,000- ஆக இருந்த மானியத்தை ரூ.30,000- ஆக அதிகரித்துள்ளது.

பிரதமா் சூா்யா கா் யோஜனாவின் கீழ் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு மத்திய அரசு ரூ.78,000 மானியம் வழங்குகிறது.

சோலாா் பேனல்களுக்கான நிறுவல் கட்டணத்தில் மக்கள் எளிதாகக் கடன்களைப் பெறுவதற்காக அரசு வங்கிகளுடன் கூட்டணி வைக்கும். மக்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து எந்தப் பணத்தையும் செலவிட வேண்டியதில்லை.

மேலும், இந்த வகையில் மக்கள் மாதத்திற்கு ரூ.4,200 வரை மிச்சப்படுத்துவாா்கள் என்று அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க