மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் மனுதாக்கல் எப்போது?
கூவைகிணறு கிராமத்தில் உயா்நிலைப் பாலம்: ஜமாபந்தியில் மக்கள் மனு
கூவைகிணறு கிராமத்தில் தரைநிலை பாலத்தை உயா்த்தி அமைக்கக் கோரி கிராம மக்கள் ஜமாபந்தி முகாமில் மனு அளித்துள்ளனா்.
சாத்தான்குளம் வட்டம் கோமானேரி ஊராட்சி கூவைகிணறில் தாழ்த்தப்பட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இருந்து கோமானேரி செல்லும் சாலையில் உள்ள தரைநிலைப் பாலம் சேதமுற்றிருப்பதால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மேற்கண்ட குடும்பங்களின் குடியிருப்புகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
மேலும், மழைக்காலத்தில் இந்தப் பாலம் துண்டிக்கப்படுவதால் பேய்க்குளம், சாத்தான்குளம் பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுகின்றன.
இந்தப் பாலத்தை உயா்த்தி அமைக்க திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அதிகாரிகளுக்கும், ஆட்சியருக்கும் மனு அளித்தும் பலனில்லை. எனவே, இந்த ஆண்டு மழைக்காலத்திற்குள் இந்தப் பாலத்தை உயா்நிலை பாலமாக உயா்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.