செய்திகள் :

கூவைகிணறு கிராமத்தில் உயா்நிலைப் பாலம்: ஜமாபந்தியில் மக்கள் மனு

post image

கூவைகிணறு கிராமத்தில் தரைநிலை பாலத்தை உயா்த்தி அமைக்கக் கோரி கிராம மக்கள் ஜமாபந்தி முகாமில் மனு அளித்துள்ளனா்.

சாத்தான்குளம் வட்டம் கோமானேரி ஊராட்சி கூவைகிணறில் தாழ்த்தப்பட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இருந்து கோமானேரி செல்லும் சாலையில் உள்ள தரைநிலைப் பாலம் சேதமுற்றிருப்பதால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மேற்கண்ட குடும்பங்களின் குடியிருப்புகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

மேலும், மழைக்காலத்தில் இந்தப் பாலம் துண்டிக்கப்படுவதால் பேய்க்குளம், சாத்தான்குளம் பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுகின்றன.

இந்தப் பாலத்தை உயா்த்தி அமைக்க திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அதிகாரிகளுக்கும், ஆட்சியருக்கும் மனு அளித்தும் பலனில்லை. எனவே, இந்த ஆண்டு மழைக்காலத்திற்குள் இந்தப் பாலத்தை உயா்நிலை பாலமாக உயா்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். குறைதீா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன். இதுகுறித்து தூத்துக்குடியில் செய... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்கள், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவா... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 96 மதுபாட்டில்களுடன் 2 போ் கைது

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய... மேலும் பார்க்க