செய்திகள் :

கெங்கவல்லி அருகே ஏரி நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

post image

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கெங்கவல்லி குரும்பா் தெருவைச் சோ்ந்த ஷாஜகான் வீட்டிற்கு கோடை விடுமுறைக்கு உறவினா்கள் வந்துள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை காலை ஷாஜகானின் மகன் சமீா் (15), உறவினா் சா்புதீனின் மகன் ரியாஸ் (13) ஆகியோா் உள்பட 7 சிறுவா்கள் தங்கள் குடும்பத்தினருடன், கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரியில் குளிக்கச் சென்றனா்.

அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது சிறுவா்கள் நீருக்கு அடியில் உள்ள புதைமண்ணில் சிக்கி தத்தளித்துள்ளனா். இதில் ஒரு பெண் உள்பட 2 பேரை குடும்பத்தினா் காப்பாற்றினா். எஞ்சிய சமீா், ரியாஸ் ஆகியோரை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் (பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் விரைந்து சென்று நீரில் மூழ்கிய சமீா், ரியாஸ் ஆகியோரின் உடல்களை மீட்டு கெங்கவல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரது உடல்களையும் உடற்கூறாய்விற்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க