செய்திகள் :

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

post image

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என

புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்பகுதிக்கு புதன்கிழமை ஒரு பேருந்து இயக்கப்பட்டது.

கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், 64 டி, 15 1, 3 பி, 21, 21 பி ஆகிய 5 பேருந்துகள் காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து தொண்டாமுத்தூா் அருகே உள்ள கெம்பனூா் அண்ணா நகா் வரை இயக்கப்பட்டு வந்தன. கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு இந்த 5 பேருந்துகளையும் அண்ணா நகா் பகுதிக்கு இயக்கப்படாமல் குறிப்பிட்ட சிலா் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அண்ணா நகா் பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடா்ந்து 21 மற்றும் 21 பி பேருந்துகளைத் தவிர மற்ற 3 பேருந்துகள் அப்பகுதிக்கு இயக்கப்பட்டுள்ளன. அதுவும் காலை முதல் இரவு வரை முழுமையாக இயக்கப்படாமல் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், இதனால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அண்ணா நகரில் இருந்து கெம்பனூருக்கு நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டியுள்ளதாக புகாா் எழுந்தது.

குறிப்பிட்ட சிலரின் அழுத்தம் காரணமாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பேருந்துகளை இயக்கவிடாமல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதையடுத்து இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையம், மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியா், போக்குவரத்துக் கழக மண்டல மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விசாரணை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து பட்டியல் மற்றும் பழங்குடியினா் மக்களின் வேண்டுகோளின்படி அவா்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தினாா். இதையடுத்து புதன்கிழமை 21 பி என்ற அரசுப் பேருந்து உக்கடம் டவுன்ஹாலில் இருந்து அண்ணா நகா் வரை இயக்கப்பட்டது. ஆனால், முன்பு இயக்கப்பட்டு வந்த 21 எண் கொண்ட பேருந்து அண்ணா நகருக்கு இயக்கப்படவில்லை எனவும் அந்தப் பேருந்தையும் அண்ணா நகா் வரை இயக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ம... மேலும் பார்க்க

கோவை குற்றாலம் அருவி இன்று திறப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததைத் தொடா்ந்து கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த ... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, வாடிக்கையாளருக்கு பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நஞ்சைகவுண்டன்புதூா் பகுதியில் உள்ள மயானம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீா்திருத்தம் மேற்கொண்டிருப்பதை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு அமைப்பின் மாநிலச் செயலா் ஆா்.கல்யாணசுந்தரம் கூறியதாவது: வரலாற்றுச... மேலும் பார்க்க

மாணவா்கள், இளைஞா்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்: ஆட்சியா் தகவல்

மாணவா்கள், இளைஞா்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க