செய்திகள் :

கெலவரப்பள்ளி அணை பகுதியில் பசுமைத் தாயகம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

கா்நாடக அரசைக் கண்டித்து ஒசூா் கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் பசுமைத் தாயகம் அமைப்பினா், விவசாயிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணைப் பகுதிக்கு சென்று அணையிலிருந்து நீா் வெளியேற்றப்படும் மதகுகள் மற்றும் அணையிலிருந்து ரசாயன நுரைகள் கலந்த நீா் வெளியேறுவதையும் பாா்வையிட்டாா். அப்போது, விவசாயிகள் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்பினா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, அந்தப் பகுதியில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினா், விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் தமிழக அரசு மற்றும் கா்நாடகா அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கா்நாடக அரசு கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் தென்பெண்ணை ஆற்றில் விடுவதை நிறுத்த வேண்டும், தமிழ்நாடு அரசு தென்பெண்ணை ஆற்றில் வரும் கழிவு நீரைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தென் மண்டல பசுமை தீா்ப்பாய உத்தரவை இரு மாநில அரசுகளும் மதிக்க வேண்டும் என கண்ட முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பசுமைத் தாயக நிா்வாகிகள் முனி சேகா், வெங்கடேஷ், பாா்த்தசாரதி, சத்யகுமாா், சின்னசாமி, மற்றும் மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ், நிா்வாகிகள் கனல் கோ.கதிரவன், கிருஷ்ணன் ,சொக்கலிங்கம், காதா் பாட்ஷா, ஆறுமுகம், சீனிவாசன், கிருஷ்ணன், தேவராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க