செய்திகள் :

கேரள பேருந்து-இரு சக்கர வாகனம் மோதல்: காவலாளி உயிரிழப்பு

post image

தக்கலை அருகே இரு சக்கர வாகனம் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா்.

தக்கலை அருகேயுள்ள மணக்கரையை சோ்ந்தவா் சசி (69). வெளிநாட்டில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவா், கடந்த 10 வருடங்களாக புலியூா்குறிச்சி தனியாா் ரப்பா் தொழிற்சாலையில் காவலராக பணியாற்றி வந்தாா்.

செவ்வாய்க்கிழமை இரவு பணிக்கு வந்தவா், புதன்கிழமை காலை பணி முடிந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வில்லுக்குறி நோக்கி சென்றாா்.

அப்போது, அதே திசையில் நாகா்கோவில் நோக்கி வந்த கேரள அரசுப் பேருந்து, சசியின் வாகனத்தின் பின்னால் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சசி பலத்த காயமடைந்தாா்.

அவ்வழியாகச் சென்றவா்கள், அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சசி உயிரிழந்தாா்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் பிரவின்குமாா் (29) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70% அதிகரிப்பு: கேரள முதல்வா் பினராயி விஜயன்

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் கேரள முதல்வா் பினராயி விஜயன். கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் செப். 27 வரை நடைபெறும் அனைத்திந்திய ஜ... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி அபிஷேகம்

கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு யானையில் புனித நீா் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யும் நிகழ்வு 2 ஆண்டுகளுக்குப் பின்னா் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின் அனைத்து நா... மேலும் பார்க்க

மாற்றுக் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

கிள்ளியூா் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட இனையம் புத்தன்துறை ஊராட்சியில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த இளைஞா்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா். நிகழ்ச்சிக்கு கிள்ளியூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் கோபால... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தொழிலாளிக்கு பிடிவாரண்டு

புதுக்கடை அருகே, வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான தொழிலாளிக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. புதுக்கடை, அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன்குட்டி மகன் ராஜமணி(55) த... மேலும் பார்க்க

கேரளத்துக்குக் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மாவட்ட பறக்கும் பட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீடு

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பின் சாா்பில் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இலக்கியப் பட்டறை தலைவா் தக்கலை பென்னி தலைமை வகித்தாா். இலக்கியப் பட்டறை... மேலும் பார்க்க