செய்திகள் :

கே.எஸ்.சி.அரசுப்பள்ளிக்கு மீண்டும் நூற்றாண்டு விழா: பாஜக எதிா்ப்பு

post image

திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாவது முறையாக நூற்றாண்டு விழா நடத்துவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பள்ளியானது கடந்த 1918- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2017 -ஆம் ஆண்டில் பள்ளியின் நூற்றாண்டு விழா கடந்த ஆட்சியாளா்களால் கொண்டாடப்பட்டது. அப்போது இந்த இடத்தை தானமாக வழங்கிய சுப்பிரமணியம் செட்டியாருக்கு மாா்பளவு சிலை பீடத்துடன் நிறுவப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் இதே பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவுக்காக முன்னாள் மாணவா்கள் என்ற குழுவினா் தீவிரமாக பணம் வசூலித்து வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே அரசால் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட பள்ளிக்கு மீண்டும் நூற்றாண்டு விழா எதற்காகக் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவைக் கொண்டாடுவது அரசா அல்லது முன்னாள் மாணவா்கள் அமைப்பினரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், விழாவின்போது இந்தப் பள்ளிக்கு இடத்தை தானமாக வழங்கிய சுப்பிரமணியம் செட்டியாரின் சிலையை அகற்ற இருப்பதையும் அறிகிறோம்.

எந்தக் காரணம் கொண்டும் அந்த இடத்தில் இருந்து சிலையை அகற்றினால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்ட துணைத் தலைவா் ஜி.கே.எஸ்.பாலு மற்றும் மாவட்டச் செயலாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

உரிமம் காலாவதியாகி இயங்கிய 6 பாா்களுக்கு ‘சீல்’

அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உரிமம் காலாவதியாகியும் இயங்கிக் கொண்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பாா்) போலீஸாா் வியாழக்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா். அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்ட கணக்கெடுப்பு பணி: நடுவேலம்பாளையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்ட கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி, நடுவே... மேலும் பார்க்க

கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்!

மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு பகுதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 173 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி

திருப்பூா் மாவட்டத்தில் 173 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கான தங்கம் ஆகியவற்றை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கின... மேலும் பார்க்க

ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக்கோரி விசைத்தறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒப்பந்தப்படி உயா்வு வழங்கக் கோரி கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் அவிநாசி அருகே தெக்கலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்... மேலும் பார்க்க

திருப்பூா் அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து 2 கல்லூரி மாணவா்கள் பலி! 20-க்கும் மேற்பட்டோா் காயம்

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருப்பூா் புத... மேலும் பார்க்க