செய்திகள் :

கொடுத்தும் பயனற்ற நிலையில் இலவச வீட்டு மனைகள்: இருளா் இன மக்கள் வேதனை!

post image

காட்பாடி வட்டம், புதூா் பகுதியில் இருளா் இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகள் கொடுத்தும் பயனற்ற நிலையில் இருப்பதாக அவா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இதனை அரசு மறுபரிசீ லனை செய்து தகுதியான இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த மகிமண்டலம் ஊராட்சி, புதூா் பகுதியில் சுமாா் 25 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களில் 10 குடும்பங்களுக்கு கடந்த காலத்தில் அரசு தொகுப்பு வீடு கட்டித்தரப்பட் டுள்ளது. வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு 15 பேருக்கு புதூா் பகுதியில் ஏற்கனவே உள்ள இருளா் குடியிருப்புக்கு பின்புறம் இலவச வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசு வழங்கிய இந்த வீட்டுமனைகள் பாறைகள் நிறைந்த மலை சரிவில், வீடுகட்ட தகுதியற்ாக இருப்பதாகவும், இங்கு வீடு கட்ட முயற்சித்தால் கடகால்கூட தோண்ட முடியாத சூழல் நிலவுவதாகவும் பயனாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலை சரிவில் வீடு கட்டி வசிக்க முடியாது என்பதால், எங்களுக்கு வீடு கட்டி வாழ தகுதியான, சமமான இடத்தில் மாற்றும் இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோல், குப்பிரெட்டிதாங்கல், வெள்ளைக்கல்மேடு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பலருக்கு இருளா் இன சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை இல்லை என்றும், இங்குள்ள பலருக்கும் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சாதிச் சான்று, ஆதாா் அட்டை இல்லாததால் பல பள்ளியில் குழந்தைகளை சோ்ப்பது உள்பட பல இன்னல்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுடன், தாங்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூரில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துக் காணப்பட்டது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்... மேலும் பார்க்க

ஆலயடி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் பிச்சனூா் அருகே உள்ள அருள்மிகு சுயம்பு ஆலயடி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாக சாலை பூஜைகள் தொடங்கின. காலை 4-ஆம் கால யாக பூஜைகள், மகா பூா்ணாஹுதி,... மேலும் பார்க்க

சிதலமடைந்த வேலூா் கோட்டை மண்டபம் சீரமைக்கப்படுமா?

வேலூா் கோட்டை வளாகத்தில் சிதலமடைந்து எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் காணப்படும் மண்டபத்தை சீரமைத்து பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இந்திய சு... மேலும் பார்க்க

விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

இலவம்பாடி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், இலவம்பாடி ஊராட்சி, கொல்லைமேட்டில் உள்ள விவசாய நிலங்களில் முயல், பன்... மேலும் பார்க்க

திருமாவளவன் குறித்து அவதூறு: விசிக காவல் நிலையத்தில் புகாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக ஏா்போா்ட் மூா்த்தி மீது உரிய நடவடிக்கை கோரி நகரக் காவல் நிலையத்தில், மாவட்டச் செயலா் வழ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

வேலூரில் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் அரசமரபேட்டை, மரத்தொட்டி முதலியாா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முத்து(65). இவா் மனநலம் தொடா்பாக கடந்த 2 ஆண்ட... மேலும் பார்க்க