செய்திகள் :

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல்

post image

கொடைக்கானல் பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பிரகாசபுரம், அட்டக்கடி, செண்பகனூா், சகாயபுரம், மன்னவனுா், பூம்பாறை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் உருளைக்கிழங்கு, பீன்ஸ் சாகுபடி செய்தனா். ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பருவமழை பெய்யும். ஆனால், நிகழாண்டில் பருவமழை சரியாக பெய்யாததால் உருளைக் கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்கியது. இந்த மஞ்சள் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

மழை சரியாக பெய்யாததால் கொடைக்கானல் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு மருந்துகள் அடித்தாலும் நோய் தாக்குதல் குறைவதில்லை. எனவே, எங்களது தோட்டங்களில் சாகுபடி செய்துள்ள உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களை வருவாயத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். மானிய விலையில் விவசாய இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பின்னோக்கி வந்த ஓட்டுநா் இல்லாத லாரி மோதியதில், மற்றொரு லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த பாம்பாட்டிகளம் என்ற பகுதியில், சாலையோரமாக ஒரு லாரி சனிக்கிழம... மேலும் பார்க்க

இளம்பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் இருப்பதாக புகாா் தெரிவித்து அவரது பெற்றோா் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மிராயபுர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா். கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இத... மேலும் பார்க்க

விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. விருப்பாச்சி மணி மண்டபத்தில் அவருடைய முழ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது: பெண் குழந்தைகளின் முன்ன... மேலும் பார்க்க

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க