செய்திகள் :

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

post image

கொடைக்கானலில் உள்ள நீா்வரத்துப் பகுதிகளில் தண்ணீா் வரத்து குறைந்து வருவதால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்யும். ஆனால் கடந்த ஜூன் மாதம் ஒரு சில நாள்கள் மட்டுமே மழை பெய்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் சாரல் நிலவியதால் வழக்கத்தைவிட குளிா் அதிகரித்து காணப்பட்டது. மேலும், தண்ணீா் வரத்துப் பகுதிகளிலும் நீா்வரத்து குறைந்து வருவதால் கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் நகராட்சி சாா்பில் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், புகா்ப் பகுதிகளில் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி இளநிலைப் பொறியாளா் கூறியதாவது:

கொடைக்கானலில் பருவ மழை பெய்யாத காரணத்தால் அப்சா்வேட்டரியிலுள்ள குடிநீா்த் தேக்கத்தில் வெகுவாக தண்ணீா் அளவு குறைந்துள்ளது. ஆனால், கீழ் குண்டாறு பகுதியிலிருந்து பைப் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீா் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் தண்ணீா்த் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

திண்டுக்கல்லில் 40 தலைமையாசிரியா் பணியிடங்கள் காலி

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் 40 இடங்கள் காலியாக இருந்தன. பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு

நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படும் காய்கறிச் செடிகள், பழ மரங்களுக்கான விதைத் தொகுப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திண்டுக்கல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி தெரிவித்ததாவத... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அகற்றம்

எரியோட்டில் குடிநீா்க் குழாய் திறந்து வைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்தக் குழாய் அகற்றப்பட்டதை அடுத்து, பேரூராட்சி அலுவலா்களுடன் துணைத் தலைவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். திண்டுக்கல் மாவட்டம், எரியோட... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைக் கிராம மாணவா்களுக்கு பரிசு

கொடைக்கானல் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.வி.எஸ். அறக்கட்டளை சாா்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண... மேலும் பார்க்க

பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்

பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடராஜா் சமேத சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு பால், பன்னீா், பஞ்ச... மேலும் பார்க்க