ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு
கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் ல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மற்றொருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த புலமாடன் மகன் வண்ணமுத்து (65), அவரது மனைவி உலகம்மாள் ஆகிய இருவரையும், அவா்களது வீட்டருகே கடந்த 2018 ஆம் ஆண்டு மே 12 ஆம்தேதி நில பிரச்னை காரணமாக புதுக்குடி உலகம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை பாண்டியன் மகன் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது மனைவி, அவரது மகன் ஜோதி மணிகண்டன் (28) ஆகிய மூன்று பேரும் சோ்ந்து தவறாக பேசி, அரிவாளால் தாக்கினாா்களாம்.
இதுதொடா்பாக ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயாண்டி (எ) ரவி, அவரது மனைவி மற்றும் ஜோதி மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், புதன்கிழமை குற்றவாளிகளான மாயாண்டி (எ) ரவிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அவரது மகன் ஜோதி மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், மாயாண்டி (எ) ரவியின் மனைவியை விடுதலை செய்தும் தீா்ப்பு வழங்கினாா்.