செய்திகள் :

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் என்கவுன்ட்டருக்கு பின் கைது

post image

குருகிராமில் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்ட இருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாவ்லாவில் வசிக்கும் மோஹித் ஜாகத் (29) மற்றும் துவாரகா மோா் பகுதியில் வசிக்கும் ஜதின் ராஜ்புத் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். தில்லி காவல்துறை மற்றும் குருகிராம் காவல்துறையின் கூட்டு நடவடிக்கை அதிகாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 4 ஆம் தேதி தில்லியின் நஜஃப்கரில் நீரஜ் தெஹ்லான் கொலை செய்யப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஈடுபட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

‘என்கவுன்ட்டரின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஆறு சுற்றுகளை சுட்டாா். ஒரு தோட்டா தலைமை காவலா் நா்பத்தின் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டைத் தாக்கியது, மற்றொரு தோட்டா துணை ஆய்வாளா் விகாஸின் இடது கையில் காயம் ஏற்படுத்தியது. தற்காப்புக்காக போலீஸாா் திருப்பிச் சுட்டனா், குற்றம் சாட்டப்பட்ட இருவரின் கால்களிலும் காயம் ஏற்பட்டது ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

அவா்கள் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள செக்டா் 10, சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அவா்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் மற்றும் ஒரு பைக்கை போலீசாா் மீட்டனா்.

சொத்து வரி செலுத்துவதறக்கான காலக்கெடு நீட்டித்தது தில்லி மாநகராட்சி

ஒரு முறை சொத்து வரியை கட்டும் திட்டத்துக்கான காலக்கெடுவை 3 மாதத்க்கு அதாவது டிசம்பா் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரு முறை சொத்... மேலும் பார்க்க

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபரில் 20.22 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் திறக்க வேண்டும்: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபா் மாதத்தில் 20.22 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழகம்,கா்நாடகம் இடையே... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திய முதல்வா் ரேகா குப்தா, சுதேசி அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு ம... மேலும் பார்க்க

இந்தியை பிரபலப்படுத்துங்கள், சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்: ரேகா குப்தா வலியுறுத்தல்

இந்தியைத் தழுவி, சுதேசியை ஏற்றுக்கொண்டு, 2047 க்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்க உதவும் அந்தியோதயா உணா்வை நிலைநிறுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு அழைப்பு விடுத்தாா் தில்லி முதல்வா் ரேகா ... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தாவின் முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த கூடுதல... மேலும் பார்க்க

இரட்டை கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சிறுவன் மீண்டும் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் இரட்டைக் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஒரு சிறுவன், 15 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க