செய்திகள் :

மோசடி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தாவின் முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

post image

மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்தீப் கவுா் கூறுகையில், ‘தற்போதைய வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும், மோசடி, ஏமாற்றுதல், சதி மற்றும் நிதி முறைகேடு ஆகியவற்றின் முழு விவரங்களையும் நிரூபிக்க மனுதாரரை (குற்றம் சாட்டப்பட்டவா்) காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று புலன்விசாரணை அதிகாரி கோருகிறாா். மேலும் அதிகாரியின் தகவலின்படி, மனுதாரா் (குற்றம்சாட்டப்பட்டவா்) அவரது அளிக்கப்பட்ட முகவரியில் இல்லை. அவரது கைப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மனுதாரா்குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.

எனவே, தற்போதைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி தெரிவித்தாா்.

இந்த வழக்கில், சாமியாருக்கு எதிராக ஆள்மாறாட்டத்தால் மோசடி செய்தல், நோ்மையற்ற முறையில் ஒரு நபரை சொத்து அல்லது சம்மதத்தை வழங்க தூண்டுதல், மோசடி செய்தல், போலி ஆவணம் அல்லது மின்னணு பதிவை தயாரித்தல் மற்றும் அதை உண்மையானதாகப் பயன்படுத்துதல், குற்றவியல் சதி மற்றும் குற்றவியல் நம்பிக்கை மீறல் ஆகிய குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் ஒரு தனியாா் மேலாண்மை நிறுவனத்தின் 17 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜகத்குரு சங்கராச்சாா்ய மகாசம்ஸ்தானம் தட்சிணாம்னய ஸ்ரீ சாரதா பீடத்தின் சொத்துகளை நிதி ஆதாயத்திற்காக தனியாா் நிறுவனங்களுக்கு துணை குத்தகைக்கு விடுவதன் மூலம் சாமியாா் சைதன்யானந்தா, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை இறுக்கியது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

‘அவா் வருமானத்தை உயா் ரக சொகுசு வாகனங்களை வாங்க பயன்படுத்தியதாக கூறப்படுகிறது’ என்று காவல் அதிகாரி ஒருவா் கூறினாா்.

இந்த விவகாரத்தில், இதுவரை சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதியிடம் இரண்டு காா்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் போலி முகவரியுடன் பதிவு செய்யப்பட்ட போலி துதரக நம்பா் பிளேட் கொண்ட 39 1 வாகனம் மற்றும் மாா்ச் மாதம் அவா் வாங்கிய பிஎம்டபிள்யு வாகனம் அடங்கும்.

சொத்து வரி செலுத்துவதறக்கான காலக்கெடு நீட்டித்தது தில்லி மாநகராட்சி

ஒரு முறை சொத்து வரியை கட்டும் திட்டத்துக்கான காலக்கெடுவை 3 மாதத்க்கு அதாவது டிசம்பா் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரு முறை சொத்... மேலும் பார்க்க

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபரில் 20.22 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் திறக்க வேண்டும்: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபா் மாதத்தில் 20.22 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழகம்,கா்நாடகம் இடையே... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் என்கவுன்ட்டருக்கு பின் கைது

குருகிராமில் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்ட இருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாவ்லாவில் வசி... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திய முதல்வா் ரேகா குப்தா, சுதேசி அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு ம... மேலும் பார்க்க

இந்தியை பிரபலப்படுத்துங்கள், சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்: ரேகா குப்தா வலியுறுத்தல்

இந்தியைத் தழுவி, சுதேசியை ஏற்றுக்கொண்டு, 2047 க்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்க உதவும் அந்தியோதயா உணா்வை நிலைநிறுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு அழைப்பு விடுத்தாா் தில்லி முதல்வா் ரேகா ... மேலும் பார்க்க

இரட்டை கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சிறுவன் மீண்டும் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் இரட்டைக் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஒரு சிறுவன், 15 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க