செய்திகள் :

கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை: ‘தனியாகச் சென்ற மாணவி மீதே தவறு’ - ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை!

post image

கொல்கத்தா: கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு தனியாகச் சென்றது தவறு என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மதன் மித்ரா பேசியிருப்பது அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவரை இந்நாள் மாணவா் இருவரும், முன்னாள் மாணவா் ஒருவரும் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் அம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை 3 பேரையும் கொல்கத்தா போலீஸ் கைது செய்தது. இந்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

என்ன சொன்னார்?

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மதன் மித்ரா சனிக்கிழமை(ஜூன் 28) பேசுகையில், “இச்சம்பவம் மாணவிகளுக்கு ஒரு செய்தியை கொண்டு சேர்க்கிறது. அது என்னவெனில், கல்லூரி மூடியிருக்கும் வேளையில் உங்களை(பெண்களை) எவர் ஒருவராவது அழைத்தால் அப்போது அங்கு தனியாகச் செல்லாதீர்கள். அதனால் எவ்வித நல்லதும் நடக்கப் போவதில்லை. பாதிக்கப்பட்ட அந்த பெண் சம்பவ இடத்துக்கு அன்று செல்லாமல் தவிர்த்திருந்தால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்காது” என்றார்.

அவரது இந்த கருத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே முதலில் தவறு இருப்பதாக பொருள் உணர முடிவதாகக் கூறி அவருக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏ மதன் மித்ரா பேசியிருப்பது அவரது சொந்த கருத்து. இதற்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் கண்டனம் தெரிவித்தும் உடனடியாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டது.

இந்தநிலையில், இது தொடர்பாக மதன் மித்ராவிடம் உரிய விளக்கம் கேட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைமை இன்று(ஜூன் 29) அழைப்பாணை அனுப்பியுள்ளது. மூன்று நாள்களுக்குள் அவர் விளக்கமளிக்க அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kolkata gangrape case: TMC issues show-cause notice to Madan Mitra for his controversial remarks

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்க... மேலும் பார்க்க

பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கொட்டித்தீா்க்கும் மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளா்கள் இறந்தனா். பொதுவாக ஜூன் 1-ஆம்... மேலும் பார்க்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா... மேலும் பார்க்க

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அத... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை: சா்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு

ஜம்மு-காஷ்மீரில் சில தினங்களில் அமா்நாத் யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், சா்வதேச எல்லை நெடுகிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை, எதிரிகளின் அச்சுறுத்தல், கடினமான சூழல் என பல... மேலும் பார்க்க

பிகாரின் நலனுக்காக பேரவைத் தோ்தலில் போட்டி! - சிராக் பாஸ்வான் மீண்டும் உறுதி

பிகாரின் நலனுக்காக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட உள்ளதாக லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். பிகாா் முதல்வா் ந... மேலும் பார்க்க