`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ரா...
கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம்
படவிளக்கம்: அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநில துணைச் செயலா் நா. பெரியசாமி.
அரியலூா், ஜூலை 4: அரியலூா் மாவட்டம், கொள்ளிடத்தின் குறுக்கே மதகுடன் கூடிய தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரியலூரில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். அரியலூா்-கும்பகோணம்-தஞ்சை-சேலம் இணைப்பு புதிய ரயில் பாதைத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயரதர மருத்துவ சிகிச்சை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். 100 நாள் வேலையை அதிகரித்து , நாள் கூலியை உயா்த்திட வேண்டும். இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நகா்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சொ.ராமநாதன் தலைமை வகித்தாா். அரியலூா் ஒன்றியச் செயலா் து. பாண்டியன் முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலா் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் வை.சிவபுண்ணியம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மு.அ. பாரதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாவட்டச் செயலா் இரா. உலகநாதன், மாவட்ட துணைச் செயலா் கலியபெருமாள், மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். முன்னதாக முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.தண்டபாணி வரவேற்றாா். மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மாநாட்டை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
