செய்திகள் :

கோகோயின் உரை.. பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிரூபிக்கிறது: அஸ்ஸாம் முதல்வர்

post image

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கோகோயின் உரை அவர் பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிருப்பித்துள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோயின் நாடாளுமன்ற உரை, அவர் பாகிஸ்தானின் சார்பாக செயல்படுவதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

கோகோயின் மனைவி, இரண்டு குழந்தைகளும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதால், அவர் எந்த நேரத்திலும் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று சர்மா குற்றம் சாட்டினார்.

அவரால் அஸ்ஸாமுக்கு அவமானம், இந்தியர்கள் என்ற பெருமைக்குத் துரோகம் செய்தவர் அவர் என்று கூறினார்.

திங்களன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது, ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதல் குறித்த அடிப்படை கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கோகோய் விமர்சித்தார்.

உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அரசு மௌனம் காத்து வருவதையும், 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலின் அடிப்படை மூலத்தையும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, முதல்வர் ஹிமாந்தா கோகோயை பல மாதங்களாகத் தாக்கி வருகிறார்.

Assam Chief Minister Himanta Biswa Sarma on Tuesday claimed that Congress MP Gaurav Gogoi's speech in Parliament "proved beyond doubt that he acts on behalf of Pakistan".

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.விவசாயிகளின் வ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:சொந்த வருவாய்க்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவும் மத்திய திட்டங்கள... மேலும் பார்க்க

"ஆபரேஷன் சிந்தூர்': இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அத... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க