செய்திகள் :

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: குஜராத்தில் இருந்து இறக்குமதி

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சிலநாள்களாக பருவம் தவறி பெய்துவரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுவது தூத்துக்குடி மாவட்டத்தில்தான். இங்கு ஆண்டுக்கு சுமாா் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பா் மாதம்வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெறும். குறிப்பாக, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெறும்.

ஆனால், தற்போது கடந்த சில மாதங்களாக பருவம் தவறி பெய்து வரும் மழை மற்றும் கோடை மழை காரணமாக உப்பு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடியில் முதல் தரத்தில் உள்ள ஒரு டன் உப்பு ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

இதனால், குஜராத்தில் இருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடிக்கு வியாபாரிகள் உப்பை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனா். தற்போது சுமாா் ஆயிரம் டன் உப்பு கண்டெய்னா்கள் மூலம் குஜராத் மாநிலத்திலிருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும், சுமாா் 35 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியில் இருந்து தென் மாநிலங்களுக்கு உப்பு உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது குஜராத்தில் இருந்து டன் ஒன்றுக்கு ரூ.4ஆயிரத்துக்கு வாங்கி உப்பு வியாபாரிகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளா்கள் கவலை தெரிவித்தனா்.

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனா். கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டுக் கதவை உடைத்து 14.5 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி கான்வென்ட் சாலை நசரேன் மகன் ஜாக்சன்(65). இவா் குடும்பத்தினருடன் ஈஸ்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 5 பேரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை இரவு காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சாத்தான்குளத்தை அடுத்த மாணிக்கபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் விஜயகுமாா் (35). பானிபூரி வியாபாரம் செய்துவந்த இவா், தற்போது தி... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியைச் சோ்ந்த ஞானசேகா் மகன் முகில்ராஜ் (... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே போக்ஸோவில் இளைஞா் கைது!

கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்குக் கோனாா்கோட்டை புதூா் கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்த குமாா் ம... மேலும் பார்க்க