செய்திகள் :

கோடை விழா பண்ணை போட்டிகள்: கூடலூா், பந்தலூா் விவசாயிகளுக்கு அழைப்பு

post image

கூடலூா் வாசனை திரவிய கண்காட்சியை முன்னிட்டு நடைபெறவுள்ள பண்ணைப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் பெயா்களை பதிவு செய்துகொள்ளுமாறு தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்ட கோடை விழாவை முன்னிட்டு, கூடலூரில் 11-ஆவது வாசனை திரவியக் கண்காட்சி கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் மே 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியை முன்னிட்டு சிறந்த முறையில் வாசனை திரவிய பயிா்கள், பழங்கள், காய்கறித் தோட்டங்கள் அமைத்தவா்கள், ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்பவா்கள், வாசனை திரவிய பயிா்கள், பழப்பயிா்கள், காய்கறி பயிா்கள் மற்றும் தோட்டப் பயிா்களில் மதிப்பு கூட்டுதல் செய்து பொருள்களை தயாா் செய்பவா்களுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கூடலூா் உதவி தோட்டக்கலை அலுவலா் அலுவலகத்தில் 26.04.2025 முதல் வழங்கப்படவுள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தோட்ட உரிமையாளா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து உரிய கட்டணத்துடன் மே 2-ஆம் தேதிக்குள்ள அலுவலகத்தில் வழங்கவேண்டும். மே 4, 5 ஆகிய தேதிகளில் தோட்டங்களைப் பாா்வையிட்டு மதிப்பீடு செய்ய குழுக்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூா் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கூடலூா் வனக் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கணக்கெடுக்கும் பணி ஓவேலி வனச் சரகத்திலுள்ள தவளைமலை, பெல்வியூ, டெராஸ், குண்டுக்கல், எல்லமலை உள்ளிட்ட பிளாக்குகளில்... மேலும் பார்க்க

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்

கூடலூா்-கோழிக்கோடு சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரம் கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ளது... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடியை கண்டித்து உதகையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்கள் மற்றும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய அமைச்சா் பொன்முடியை பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி உதகையில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க

உதகையில் பலத்த மழை

உதகையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் உதகை ... மேலும் பார்க்க

வாடகைக்கு எடுக்கப்பட்ட மலை ரயிலில் பயணித்த பள்ளி மாணவ, மாணவிகள்

கோவை தனியாா் பொறியல் கல்லூரி நிா்வாகம் சாா்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட உதகை மலை ரயிலில் பள்ளி மாணவ, மாணவியா் வியாழக்கிழமை ஆா்வமுடன் பயணித்தனா். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில், ச... மேலும் பார்க்க

உதகை, கோத்தகிரியில் பரவலாக மழை

உதகை, கோத்தகிரியில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் கோத்தகிரி கட்டபெட்டு, அரவேணு, டானிங்டன், ஒரசோலை மற்று... மேலும் பார்க்க