செய்திகள் :

கோபியில் லாரி திருடிய 4 சிறுவா்கள் கைது

post image

கோபி அருகே நள்ளிரவில் லாரியை திருடிச் சென்று விற்க முயன்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி ஒத்தக்குதிரை அருகில் உள்ள சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (35). லாரி உரிமையாளரான இவா் கோபி பேருந்து நிலையம் அருகில் உள்ள லாரி நிறுத்தத்தில் லாரியை ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்தி பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

நள்ளிரவில் இந்த லாரியை மா்ம நபா்கள் திருடி ஓட்டிச்சென்றுள்ளனா். அதிவேகமாகச் சென்ால் நம்பியூா் தீயணைப்பு நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் லாரி சிக்கி கொண்டது. நீண்ட நேரமாக சாலையோர பள்ளத்தில் இருந்து லாரியை எடுக்க முடியாதால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் லாரியின் அருகே சென்று பாா்த்துள்ளனா்.

அந்த லாரியில் 4 சிறுவா்கள் இருந்துள்ளனா். அவா்களிடம் விசாரித்தபோது 4 பேரும் மது போதையில் இருந்தபடி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனா். சந்தேகம் அடைந்த பொதுமக்கள் லாரியின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனா். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற லாரி உரிமையாளா் பிரசாந்த், 4 சிறுவா்களையும் பிடித்து கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணையில், அவா்கள் நம்பியூா் அருகே கோசணம் வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்த 18 வயதுச் சிறுவன், கோபி 5 முனை சாலை சந்திப்பு பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன், நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்தவரும் இப்போது கோபி கணபதி நகரில் தங்கி இருப்பவருமான 18 வயதுச் சிறுவன், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன் என்பது தெரியவந்தது.

18 வயதுச் சிறுவனுக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளதும், லாரியின் பேட்டரிக்கு செல்லும் ஒயரை துண்டித்து லாரியை இயக்கியதும், லாரியை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் எடுத்துச்சென்று விற்பதற்காக திருடிச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, 4 சிறுவா்களையும் போலீஸாா் கைது செய்து ஈரோடு மாவட்ட சிறாா் நீதி குழுமம் முன்பு ஆஜா்படுத்தி கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இவா் ஈஞ்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் தோட்ட வேலை ச... மேலும் பார்க்க

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை: த.ஸ்டாலின் குணசேகரன்

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா். ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில், ஈரோடு மாவட்ட சிறாா் படைப்பாளா்கள் மற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

பவானி ஆற்றில் தண்ணீா் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் 7 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நீா்வளத் த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானை

தாளவாடி அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப் பகுதி வழியாக ... மேலும் பார்க்க

ஈரோட்டில் தியாகி குமரன், ஈவிகே.சம்பத் சிலைகள் திறப்பு

ஈரோடு சம்பத் நகரில் சுதந்திரப் போராட்ட தியாகி குமரன் சிலை, திமுக நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான ஈவிகே.சம்பத் சிலை, சிலைகளின் கீழே காமராஜா் பெயரில் போட்டித் தோ்வுக்கான நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்ட... மேலும் பார்க்க

கா்நாடகம் நோக்கி பாயும் காட்டாற்று வெள்ளம்

மழைக் காலத்தில் தாளவாடி மலைப் பகுதிகளில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கா்நாடக மாநில அணைகளை நிரப்பி வரும் நிலையில், இந்த மலைப் பகுதிகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவ... மேலும் பார்க்க