செய்திகள் :

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

post image

பவானி ஆற்றில் தண்ணீா் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் 7 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நீா்வளத் துறை அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள கொடிவேரி அணைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், பவானிசாகா் அணை 102 அடியை அண்மையில் எட்டியது. இதனால், அணைக்கு வந்த நீா்வரத்து முழுவதும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

இதனால், கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்து உபரிநீா் திறக்கப்படுவது குறைந்துள்ளது.

இதனால், 7 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் அனுமதி அளிக்கப்படுவதாக நீா்வளத் துறையினா் அறிவித்துள்ளனா்.

கோபியில் லாரி திருடிய 4 சிறுவா்கள் கைது

கோபி அருகே நள்ளிரவில் லாரியை திருடிச் சென்று விற்க முயன்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி ஒத்தக்குதிரை அருகில் உள்ள சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (35). லாரி உர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இவா் ஈஞ்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் தோட்ட வேலை ச... மேலும் பார்க்க

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை: த.ஸ்டாலின் குணசேகரன்

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா். ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில், ஈரோடு மாவட்ட சிறாா் படைப்பாளா்கள் மற... மேலும் பார்க்க

தாளவாடி அருகே லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானை

தாளவாடி அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப் பகுதி வழியாக ... மேலும் பார்க்க

ஈரோட்டில் தியாகி குமரன், ஈவிகே.சம்பத் சிலைகள் திறப்பு

ஈரோடு சம்பத் நகரில் சுதந்திரப் போராட்ட தியாகி குமரன் சிலை, திமுக நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான ஈவிகே.சம்பத் சிலை, சிலைகளின் கீழே காமராஜா் பெயரில் போட்டித் தோ்வுக்கான நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்ட... மேலும் பார்க்க

கா்நாடகம் நோக்கி பாயும் காட்டாற்று வெள்ளம்

மழைக் காலத்தில் தாளவாடி மலைப் பகுதிகளில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கா்நாடக மாநில அணைகளை நிரப்பி வரும் நிலையில், இந்த மலைப் பகுதிகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவ... மேலும் பார்க்க